உத்தமபாளையத்தில் இன்று மின் தடை
உத்தமபாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உத்தமபாளையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, உ.அம்மாபட்டி, கோம்பை, பண்ணைப்புரம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.