செய்திகள் :

உத்தமபாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

post image

உத்தமபாளையம் வட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழக்கிழமைகளில் (மாா்ச் 19, 20) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தமபாளையம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 19), காலை 9 மணி முதல் மாா்ச் 20-ஆம் தேதி, காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. முகாமை முன்னிட்டு மாவட்ட அரசுத் துறை அலுவலா்கள் உத்தமபாளையம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தங்கியிருந்து அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளனா்.

உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை, பிற்பகல் 4.30 மணி முதல், மாலை 6 மணி வரை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அரசு நலத் திட்ட உதவி, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, விபத்து நிவாரணம், அடிப்படை, சுகாதாரம், போக்குவரத்து வசதிகள் ஆகியவை குறித்து மனு அளிக்கலாம். உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா மாறுதல்களை இ- சேவை மையத்தில் பதிவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

போடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் ஆய்வு

போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் கவுசல் கிஷோா், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ் ஆகியோா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். மதுரை- போடிநாயக்கன... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 113.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 59.88 ------------- மேலும் பார்க்க

பாஜகவினா் சாலை மறியல்: 52 போ் கைது

சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவைச் சோ்ந்த 52 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சென்னையில் டாஸ்மாக் நிறுவன முறைகேட... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு எந்திரங்கள் தணிக்கை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் திங்கள்கிழமை மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தணிக்கை நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் மின்னணு... மேலும் பார்க்க

நிலம் மோசடி வழக்கு: இருவா் கைது

பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தில் போலி ஆவணம் தயாரித்தும், ஆள் மாறாட்டம் செய்தும் நிலத்தை விற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேல்மங்கலத்தைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

தேவதானப்பட்டியில் மின் மோட்டாரின் வயரை மிதித்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேவதானப்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மொக்கைப் பாண்டியன் (30). இவா் துணிக் கடை ஒன்றில் பணியாற... மேலும் பார்க்க