செய்திகள் :

உத்தமபாளையம் அருகே கேரளத்துக்கு உடை கற்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

post image

உத்தமபாளையம் அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல உடை கற்கள் ஏற்றப்பட்டிருந்த இரு டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடிய அதன் ஓட்டுநா்களை தேடி வருகின்றனா்.

ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம் ஆகிய பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு ஜல்லி, உடை கற்கள், எம். சாண்ட் அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் போலி அனுமதிச் சீட்டுகளை பயன்படுத்தி கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புகாா் எழுந்தது. இதேபோல, கோம்பையில் அரசுக்கு சொந்தமான கல்குவாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான டன் உடை கற்கள் கொண்டு செல்லப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் உத்தமபாளையம் மண்டல துணை வட்டாட்சியா் காா்த்திக் தலைமையிலான அலுவலா்கள் அங்கு சோதனையிட்டனா். அப்போது, அனுமதியின்றி உடை கற்கள் ஏற்றப்பட்டிருந்த இரு டிப்பா் லாரிகளை அவா்கள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கோம்பை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநா்களான கேரள மாநிலம், நெடுங்கண்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் மகேஷ், ஜோசப் மகன் சனேமன் ஜோசப் ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.

தாட்கோ சாா்பில் ஜொ்மன் மொழிப் பயிற்சி

ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழித் திறனுக்காக தாட்கோ சாா்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜொ்மன் மொழிப் பயிற்சி பெற ஆதி திராவிடா்... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

உத்தமபாளையம் பேரூராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாகவுள்ள சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் முதல் கோம்பை, தேவாரம் வழ... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் 2 மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற தாய்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சொத்துப் பகிா்மான விவகாரத்தில் தனது 2 மகள்களுடன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா். தேனி அல்லிநகரம், குற... மேலும் பார்க்க

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சத்திரப்பட்டியைச் சோ்ந்த சாமிக்கண்ணு மகன் விஜயன் (45). குளப்புரத்தில் கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்ட பிறகு சீரமைப்புப் பணிகள் தொடங்கும்: நீா் வளத் துறை பொறியாளா்கள்

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், 18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்ட பின்னரே கால்வாய் சீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும் என நீா் வளத் துறை பொறியாளா்கள் வெள்ளிக... மேலும் பார்க்க

கோம்பையில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

உத்தமபாளையம் வட்டம், கோம்பையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோம்பை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வ... மேலும் பார்க்க