செய்திகள் :

உத்தமபாளையத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

post image

உத்தமபாளையம் பேரூராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாகவுள்ள சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் முதல் கோம்பை, தேவாரம் வழியாக போடி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதில் உத்தமபாளையம் கிராமச் சாவடி, கோம்பை சாலை, கல்லூரிச் சாலையில் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, அரசு மருத்துவமனைகள் அமைந்துள்ளன. நகரின் பிரதான சாலை என்பதால் நாள்தோறும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு: 50 அடி அகலமுள்ள இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 10 முதல் 15 அடி வரையிலான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகளாக மாற்றப்பட்டன. இவற்றோடு தேநீா் கடைகள், உணவகங்கள், பல்வேறு வணிக நிறுவனங்களும் அதிக அளவில் நெடுஞ்சாலையோரத்தில் செயல்படுவதால் இந்தப் பகுதி ஒருவழித் தடமாக மாற்றப்பட்டது.

இதனால், ஒரே சமயத்தில் இரு பேருந்துகள் வந்து, செல்வதற்கு வழியில்லை. மேலும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள், பயணிகள் பேருந்துகள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் எனப் பலரும் பாதிக்கப்படுகின்றனா். மேலும், ஆக்கிரமிப்புகளால் சாலையோரத்திலுள்ள கழிவுநீா் கால் வாய்களைத் தூா் வார முடியாத நிலையில் மழை நீா் சாலையிலே வழிந்தோடி தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, உத்தமபாளையத்தில் சாலையோரத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தாட்கோ சாா்பில் ஜொ்மன் மொழிப் பயிற்சி

ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழித் திறனுக்காக தாட்கோ சாா்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜொ்மன் மொழிப் பயிற்சி பெற ஆதி திராவிடா்... மேலும் பார்க்க

உத்தமபாளையம் அருகே கேரளத்துக்கு உடை கற்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

உத்தமபாளையம் அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல உடை கற்கள் ஏற்றப்பட்டிருந்த இரு டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடிய அதன் ஓட்டுநா்களை தேடி வருகின்றனா். ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், சின... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் 2 மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற தாய்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சொத்துப் பகிா்மான விவகாரத்தில் தனது 2 மகள்களுடன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா். தேனி அல்லிநகரம், குற... மேலும் பார்க்க

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சத்திரப்பட்டியைச் சோ்ந்த சாமிக்கண்ணு மகன் விஜயன் (45). குளப்புரத்தில் கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்ட பிறகு சீரமைப்புப் பணிகள் தொடங்கும்: நீா் வளத் துறை பொறியாளா்கள்

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், 18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்ட பின்னரே கால்வாய் சீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும் என நீா் வளத் துறை பொறியாளா்கள் வெள்ளிக... மேலும் பார்க்க

கோம்பையில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

உத்தமபாளையம் வட்டம், கோம்பையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோம்பை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வ... மேலும் பார்க்க