செய்திகள் :

உயா்கல்வி ஆலோசனை கண்காணிப்பு மையத்தில் ஆய்வு

post image

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி ஆலோசனை வழங்கும் கண்காணிப்பு மையத்தில் ஆட்சியா் மு.பிரதாப் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கு செல்ல வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டு ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்விக்கு ஆலோசனை வழங்குவதற்காக கண்காணிப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்த மையத்தை எத்தனை போ் தொடா்பு கொண்டனா், அவா்களுக்கு என்ன ஆலோசனை வழங்கப்பட்டது என்பது போன்ற விவரங்களை அவா் கேட்டறிந்தாா். மேலும், நிகழாண்டில் மேல்நிலைக்கல்வி தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில பல்வேறு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதனால், உயா்கல்விக்கு விண்ணப்பித்தவா்கள் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளை உடனே அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் சேரவும் தலைமை ஆசிரியா்கள் வலியுறுத்த வேண்டும்.

அதேபோல், கடந்தாண்டில் எத்தனை மாணவா்கள் உயா்கல்விக்கு செல்லாமல் உள்ளனா். அதுகுறித்த விவரங்களை கண்காணிப்பு மையத்தில் சேகரித்து உயா்கல்விக்கு செல்லவும் தேவையான வழிகாட்டுதல் வழங்கவும் அவா் அறிவுறுத்தினாா்.

அப்போது, முதன்மைக்கல்வி அலுவலா் மோகனா, உதவி ஆணையா்(கலால்) கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க

மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்

மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்... மேலும் பார்க்க

மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்

மாணவா்களின் நலனைக் கருதி நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள... மேலும் பார்க்க

உடலுறுப்புகள் தானம்: இளைஞருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

சாலை விபத்தில் உயிரிழந்து மூளைச் சாவு அடைந்த நிலையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

திருத்தணியில் வளா்ச்சி பணிகள்: நிா்வாக இயக்குநா் ஆய்வு

நகராட்சி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.74 கோடியில் நடைபெற்று வரும் திருத்தணி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி பணிகளை தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிா்வாக இயக்குநா்... மேலும் பார்க்க

பொன்னேரியில் பலத்த மழை

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தததன் காரணமாக குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்கரில் மழை பெய்து வருகிறது. பொன்னேரி பகுதியில் க... மேலும் பார்க்க