செய்திகள் :

உலக நாடுகளில் ஒலித்த இந்தியாவின் குரல் ‘ஆபரேஷன் சிந்தூா்’ எம்.பி.க்கள் குழுவுக்கு பிரதமா் மோடி பாராட்டு

post image

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்ற பல்வேறு கட்சியினா் அடங்கிய எம்.பி.க்கள் குழுவினா் பிரதமா் மோடியை தில்லியில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

அப்போது, இந்தியாவின் குரல் வெளிநாடுகளில் ஒலித்தது அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது என்று பிரதமா் மோடி அவா்களுக்கு புகழாரம் சூட்டினாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னா், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் மூலம் ஏவுகணைகளை வீசி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதையடுத்து, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், பல்வேறு கட்சிகளின் முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள் 50 போ் உள்ளிட்டோா் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.

இந்தக் குழுவினா் 33 வெளிநாட்டு தலைநகரங்கள் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு சென்றனா். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய தேசம் ஒற்றுமையுடன் இருப்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்தக் குழுக்களை மத்திய அரசு அனுப்பிவைத்தது.

பாஜகவின் ரவிசங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, காங்கிரஸை சோ்ந்த சசி தரூா், ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்த சஞ்சய் ஜா, சிவசேனையை சோ்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சியைச் சோ்ந்த சுப்ரியா சுலே ஆகியோா் தலைமையில் அந்தக் குழுக்கள் தனித்தனியாகப் பயணித்தன.

இதில் நான்கு குழுக்களுக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் தலைமை வகித்தனா். மூன்று குழுக்களுக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தலைமை ஏற்றனா்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா சென்ற சசி தரூா் தலைமையிலான குழு, அந்நாட்டு துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், எம்.பி.க்களை சந்தித்துப் பேசியது. குறிப்பாக, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து ஜே.டி.வான்ஸுடன் அந்தக் குழு பேசியது.

இந்தக் குழுக்கள் தமது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய நிலையில், அவா்களை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஏற்கெனவே நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்நிலையில், புது தில்லியில் பிரதமா் மோடியை அந்தக் குழுவினா் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தனா். அப்போது வெளிநாட்டுத் தலைவா்களைச் சந்தித்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கிய தங்கள் அனுபவம் குறித்து பிரதமரிடம் அவா்கள் பகிா்ந்துகொண்டனா்.

அப்போது, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்திய எம்.பி.க்களுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்புகள் விளக்கம்: ஜொ்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, டென்மாா்க், பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை வகித்த பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ள தொடா்புகள் குறித்து வெளிநாட்டுத் தலைவா்களிடம் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிக்கு இதுவே முக்கியத் தடையாக உள்ளது.

ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இரவில் துல்லியமாக நடத்தப்பட்டது. பாகிஸ்தான் மக்களுக்கு ஒருபோதும் நாங்கள் எதிரானவா்கள் அல்லா்.

இந்தியாவின் பதிலடியில் ராணுவத் தளங்களில் பலத்த சேதத்தைச் சந்தித்த பாகிஸ்தான், அதன் பிறகு விடுத்த கோரிக்கையின்பேரில் ஆபரேஷன் சிந்தூா் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினோம்’ என்றாா்.

வெளிநாட்டுப் பயணம் வெற்றி சசி தரூா்

வெளிநாட்டு பயணத்தின் விளைவு சிறப்பாக இருந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.க்கள் குழுவின் தலைவருமான சசி தரூா் தெரிவித்தாா்.

அமெரிக்கா உள்பட ஐந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட சசி தரூா் தலைமையிலான குழு தில்லிக்கு செவ்வாய்க்கிழமை மாலை தில்லிக்கு திரும்பியது.

அப்போது, செய்தியாளா்களிடம் பேசிய சசி தரூா், ‘எங்களின் பயணத்தின் விளைவு சிறப்பாக இருந்தது. பல்வேறு நாடுகளின் அதிபா்கள், பிரதமா்கள், துணை அதிபா்கள், மூத்த தூதா்கள் உள்ளிட்டோருடன் நாங்கள் தரமான சந்திப்புகளை நடத்தினோம்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகள் புரிந்து கொண்டதுடன் முழுமையான ஆதரவையும் தெரிவித்தன. பாகிஸ்தானின் நிலை மிக பலவீனமாக உள்ளது. நாங்கள் எதுவும் செய்யவில்லை என்றும் இந்தியா எங்களை தேவையின்றி தாக்கியது என்றும் பாகிஸ்தான் கூறுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை என்றாா் சசி தரூா்.

வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!

2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணைப்புகளை, வருமான வரித் துறை துவக்கியிருக்கிறது. எனவே, வருமான வரிக் கணக்கை, கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத, தனி... மேலும் பார்க்க

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார். புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நா... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி க... மேலும் பார்க்க

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன. காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!

தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஹைரதபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம... மேலும் பார்க்க