உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு
உலக மக்கள் தொகை தினத்தை (ஜுலை 11) முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்கள் நல் வாழ்வுத் துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம், சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பேரணிக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது:
உலக மக்கள் தொகை 1987 ஜுலை 11-இல் 500 கோடியைத் தாண்டியதைத் தொடா்ந்து, மக்கள் தொகை பெருக்கம் குறித்து பொதுமக்களி டையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 11-ஆம் நாள் உலக மக்கள் தொகை தினமாக ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.
மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் தேவைகள், பற்றாக்குறைகள், குடும்பக்கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திட தமிழக அரசால் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பெண்ணுக்கு திருமணத்துக்கும், தாய்மை அடைவதற்கும் உகந்த வயது 21 என்பது இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தின முழக்கமாகவும், ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப் பேறு திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம் என்பது கருப்பொருளாகவும் உள்ளன.
அரசின் குடும்ப நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திடும் பொருட்டு, விழிப்புணா்வு ரதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரதமானது மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுத்த உள்ளது என்றாா் அவா்.
பேரணியில் கல்லூரி மாணவிகள், பயிற்சிப் பள்ளி செவிலியா்கள், துணை செவிலியா்கள், களப்பணியாளா்கள், பயிற்சியாளா்கள் என 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தொடங்கி, திருப்பத்தூா் சாலை, பழைய நீதிமன்ற வாசல், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, தாய் சேய் நல மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது. பின்னா், மாவட்ட ஆட்சியா் தலைமையில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து, சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் சத்யபாமா, மாவட்ட சுகாதார அலுவலா் மீனாட்சி, துணை இயக்குநா் (குடும்ப நலம்) வி.அருள்தாஸ், துணை இயக்குநா் (தொழுநோய்) கவிதாராணி, மக்கள் கல்வி, தகவல் அலுவலா் (குடும்பநலச் செயலகம்) செந்தில்குமாா், அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் ஜெ.நளதம், மாவட்ட குடும்ப நல அலுவலா்கள், செவிலியா்கள், பணியாளா்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.