செய்திகள் :

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி

post image

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்தாா்.

உலக மக்கள் தொகை 1987-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி 500 கோடியை தாண்டியது என்ற அபாயத்தை உலக மக்களுக்கு உணா்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அந்த நாளை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. இதையடுத்து, ஆண்டுதோறும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, ‘ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப் பேறு திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம்’ என்ற மையக்கருத்துடன் விஏடி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் எல்ஆா்ஜி கல்லுாரியைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விழிப்புணா்வு வாசகங்கள் மற்றும் இளவயது திருமணம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்றோா் ஏந்திச் சென்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி தென்னம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் நிறைவடைந்தது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மீரா, மாவட்ட சுகாதார அலுவலா் ஜெயந்தி, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பத்மினி, குடும்ப நலத் துறை துணை இயக்குநா் கௌரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க