செய்திகள் :

உலகக் கோப்பையை வெல்வதில் உறுதியாக இருக்கிறோம்: ஹர்மன்பிரீத் கௌர்

post image

உலகக் கோப்பையை வெல்வதில் இந்திய அணி உறுதியாக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்குகிறது. குவாஹாட்டியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.

உலகக் கோப்பைத் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுவதால், இந்த இரண்டு அணிகளின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இளம் மற்றும் மூத்த வீராங்கனைகள் என இந்திய அணி சமபலத்துடன் இருப்பதாகவும், உலகக் கோப்பையை வெல்வதில் உறுதியாக இருப்பதாகவும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளையும் பூர்த்தி செய்யும் விதமான சமபலத்துடன் கூடிய இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்குகிறது. அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், பிரதீகா ராவல், ரிச்சா கோஷ் மற்றும் உமா சேத்ரி போன்ற திறமைவாய்ந்த பேட்டர்கள் இருக்கிறார்கள்.

இந்திய அணியில் பந்துவீச்சும் வலுவாக உள்ளது. ரேனுகா தாக்குர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கௌட், ஸ்ரீ சரணி மற்றும் ராதா யாதவ் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர். அத்துடன் அணியில் தீப்தி சர்மா, ஸ்நே ராணா மற்றும் அமன்ஜோத் கௌர் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றக் கூடியவர்கள்.

சமபலத்துடன் உள்ள இந்திய அணி மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்குகிறது. இந்திய அணிக்கு கோப்பையை வென்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற போட்டி அணிகளுக்குள் எப்போதும் கடுமையாக இருக்கும். ஆனால், அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு திருப்திகரமானதாக இருந்தது. அதே உத்வேகத்துடன் உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்குகிறோம் என்றார்.

Indian captain Harmanpreet Kaur has said that the Indian team is determined to win the World Cup.

இதையும் படிக்க: அபிஷேக் சர்மா - ஷாகின் ஷா அஃப்ரிடி இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: மோர்கெல்

அபிஷேக் சர்மா - ஷாகின் ஷா அஃப்ரிடி இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: மோர்கெல்

அபிஷேக் சர்மா - ஷாகின் ஷா அஃப்ரிடி இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய... மேலும் பார்க்க

அபிஷேக் சர்மாவுக்கு இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற... மேலும் பார்க்க

இந்திய ரசிகர்கள் சிஎஸ்கே ஜெர்ஸி அணிந்து வாருங்கள்: ஆஸி. மகளிரணி கேப்டன்

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி இந்திய ரசிகர்களை சிஎஸ்கேவின் ஜெர்ஸியை அணிந்து வருமாறு கூறியது வைரலாகி வருகிறது. மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் செப்.30 முதல் இந்தியா மற்றும் இல... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை வீரர்!

ஆசிய கோப்பையில் இலங்கை வீரர் பதும் நிசங்கா கோலி சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். தனது முதல் டி20 சதத்தை ஆசிய கோப்பையில் அடித்த நிசங்கா பலவேறு சாதனைகளைக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார். ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு 30% அபராதம்

பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்று கடைசிப் போட்டி: இந்தியா பேட்டிங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சூற்றின் கடைசிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி... மேலும் பார்க்க