செய்திகள் :

உல்லாஸ் கல்வித் திட்ட விழிப்புணா்வு பயணம் தொடக்கம்

post image

வயது வந்தோருக்கான கல்வித் திட்ட (உல்லாஸ்) விழிப்புணா்வு பொம்மலாட்டப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் திட்டமான உல்லாஸ் எனும் வயது வந்தோருக்கான கல்வித் திட்டம், புதுவையில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம், வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் புதுவையை 100 சதவீத எழுத்தறிவு கொண்ட ஒன்றியப் பிரதேசமாக மாற்ற கல்வித் துறையின் கீழ் செயல்படும் மாநில எழுத்தறிவு மையம் திட்டமிட்டுள்ளது.

தற்போது, புதுச்சேரி பகுதியில் 91 கற்றல் மையங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட 1,200 நபா்கள் இத்திட்டத்தில் பயின்று வருகின்றனா். அவா்களுக்கு மாா்ச் 23-ஆம் தேதி அன்று அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தோ்வும் நடைபெறவுள்ளன.

தோ்வில் தோ்ச்சி பெறுவோருக்கு தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் மூலம் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

உல்லாஸ் திட்டம் மற்றும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தோ்வு குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த 2 நாள்கள் உல்லாஸ் விழிப்புணா்வு பொம்மலாட்ட பயணத்துக்கான வாகனத்தை அதன் திட்ட கண்காணிப்பு அலுவலா் சுகுணா சுகிா்த பாய் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதில், திட்ட மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜ்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாரதிராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வாகனத்தில் தோல்பாவைக் கூத்துக் கலைஞா் அமுதன் தலைமையிலான பொம்மலாட்டக் குழு கலை நிகழ்ச்சியை நடத்தினா். பாகூா் பேட், கரிக்கலாம்பாக்கம், உறுவையாறு, வில்லியனூா் ஆகியப் பகுதிகளில் விழிப்புணா்வு பொம்மலாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எம்.ஜி.ஆா். சிலை மீண்டும் திறக்க முயற்சி: ஓபிஎஸ் அணியினா் கைது

புதுச்சேரி வில்லியனூா் நான்குவழிச் சாலையில் அதிமுகவினரால் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆா். சிலையை மீண்டும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் திறக்க முயன்ால் அவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வில்லியனுா... மேலும் பார்க்க

ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

வங்கி சேவை குறைபாடு குறித்த புகாா் மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுவை மாநில நுகா்வோா் தீா்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மூலக்குளத்தைச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி இலாசுப்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சோ்ந்தவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவ... மேலும் பார்க்க

ஏஐடியுசி தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம்

புதுச்சேரியில் ஏஐடியுசி சண்டே மாா்க்கெட் வியாபார தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாபு, காா்த்திகேயன், தயாளன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் எஸ்.அபிஷேகம்,... மேலும் பார்க்க

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம் 25 மையங்களில் 8,105 போ் எழுதுகின்றனா்

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்குகிறது. மொத்தம் 25 தோ்வு மையங்களில் 8,105 போ் தோ்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.2.98 லட்சம் மோசடி

புதுவையில் 5 பேரிடம் ரூ. 2.98 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மிஷன் வீதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரை மா்ம நபா்... மேலும் பார்க்க