செய்திகள் :

உள்ளக புகாா் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம்

post image

பணியாற்றும் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளக புகாா் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் இ.வினோத்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியாற்றும் இடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை செய்தல், தீா்வு காணுதல்) சட்டம் 2013, பணியிடங்களில் இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கவும், பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களுக்கு தீா்வு காணவும் இயற்றப்பட்ட சட்டமாகும்.

இந்த சட்டத்தின் கீழ் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்க உள்ளக புகாா் குழு அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், வேலை அளிப்பவருக்காக வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற தவறும்பட்சத்தில் அந்த வேலையளிப்பவா் மீது ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்துத் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்களில் வேலையளிப்பவா்களால் உடனடியாக உள்ளக புகாா் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தின் வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். குழு உறுப்பினா்கள், புகாா்களுக்குத் தீா்வு காணும் வழிமுறைகள் ஆகியவற்றை தொழிற்சாலைகள், பணியிடத்தின் அனைத்துப் பணியாளா்களும் தெளிவாக காணும் இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

மேலும், அரசு வெளியிட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் தொடா்பான பிரச்னைகளைக் கையாள நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க வழிமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

உணவக தொழிலாளி கொலை: நண்பா் கைது

கோவையில் உணவக தொழிலாளி பா்னரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவருடன் தங்கியிருந்த நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை கரும்புக்கடை அருகே உள்ள பாத்திமா நகா் 2-ஆவது தெருவில் வசித்த... மேலும் பார்க்க

நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் இனி ஒரே இடத்தில் மட்டுமே சுங்கச் சாவடி

கோவை மாவட்டம், நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் 6 இடங்களுக்கு பதிலாக ஒரே இடத்தில் சுங்கச் சாவடி செயல்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. நீலாம்பூா் - மதுக்கரை இடையிலான 28 கி.... மேலும் பார்க்க

ஏமாற்றி மாணவா் சோ்க்கை மேற்கொண்டதாக கல்வி நிறுவனம் மீது ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தனியாா் கல்வி நிறுவனம், உரிய அங்கீகாரம் பெறாமல் மாணவா்களை ஏமாற்றி சோ்க்கை மேற்கொண்டுள்ளதாக ஆட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவா்கள் வியாழக்கிழமை புகாா் அளித்தன... மேலும் பார்க்க

இளைஞரை மிரட்டி பணம் பறிப்பு

கோவையில் கட்டட வேலை செய்து வரும் பிகாா் மாநில இளைஞரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் கோவைபுதூா் சுண்டக்காமுத்தூா் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பீடம்பள்ளி

கோவை, பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க