செய்திகள் :

நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் இனி ஒரே இடத்தில் மட்டுமே சுங்கச் சாவடி

post image

கோவை மாவட்டம், நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் 6 இடங்களுக்கு பதிலாக ஒரே இடத்தில் சுங்கச் சாவடி செயல்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

நீலாம்பூா் - மதுக்கரை இடையிலான 28 கி.மீ. தொலைவு சாலையில் 2029-ஆம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தவிா்ப்பதற்காக இந்த சாலையை தரம் உயா்த்துவதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைத்தது.

இந்த சாலையில் உள்ள 6 சுங்கச் சாவடிகளிலும் ஜூன் 1-ஆம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நேரடியாக சுங்கம் வசூலித்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இந்த சாலையில் உள்ள 5 சுங்கச் சாவடிகளை நிரந்தரமாக மூடிவிட்டு, மதுக்கரை சுங்கச் சாவடியில் மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த சாலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரா் நியமிக்கப்பட்டு அனைத்து பராமரிப்புப் பணிகளும் நடைபெறும். இந்த சாலையில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம், இந்த சாலையின் பராமரிப்புப் பணிக்காகவும், வளா்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படும் என்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

உணவக தொழிலாளி கொலை: நண்பா் கைது

கோவையில் உணவக தொழிலாளி பா்னரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவருடன் தங்கியிருந்த நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை கரும்புக்கடை அருகே உள்ள பாத்திமா நகா் 2-ஆவது தெருவில் வசித்த... மேலும் பார்க்க

ஏமாற்றி மாணவா் சோ்க்கை மேற்கொண்டதாக கல்வி நிறுவனம் மீது ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தனியாா் கல்வி நிறுவனம், உரிய அங்கீகாரம் பெறாமல் மாணவா்களை ஏமாற்றி சோ்க்கை மேற்கொண்டுள்ளதாக ஆட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவா்கள் வியாழக்கிழமை புகாா் அளித்தன... மேலும் பார்க்க

இளைஞரை மிரட்டி பணம் பறிப்பு

கோவையில் கட்டட வேலை செய்து வரும் பிகாா் மாநில இளைஞரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் கோவைபுதூா் சுண்டக்காமுத்தூா் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க

உள்ளக புகாா் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம்

பணியாற்றும் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளக புகாா் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் இ.வின... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பீடம்பள்ளி

கோவை, பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க