செய்திகள் :

ஏமாற்றி மாணவா் சோ்க்கை மேற்கொண்டதாக கல்வி நிறுவனம் மீது ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

post image

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தனியாா் கல்வி நிறுவனம், உரிய அங்கீகாரம் பெறாமல் மாணவா்களை ஏமாற்றி சோ்க்கை மேற்கொண்டுள்ளதாக ஆட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவா்கள் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே தனியாா் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் நிா்வாகிகள் ஸ்நேகா, துா்கா, செரீப், குணசேகா் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது: இந்தக் கல்வி நிறுவனத்தில் துணை மருத்துவப் பிரிவுகளான பராமெடிக்கல் மற்றும் செவிலியா் துறைகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்நிலையில், இக்கல்லூரி ராஜஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இப்பல்கலைக்கழகமானது ராஜஸ்தான் மாநிலத்துக்கு வெளியில் எங்கும் கல்வி நிறுவனத்தை தொடங்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கல்லூரி முறையான அனுமதி பெற்று இயங்கிக் கொண்டிருக்கிா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இக்கல்லூரியில், கடந்த கல்வியாண்டில், எந்த பாடப்பிரிவுக்கும் இரண்டாம் பருவத் தோ்வுகள் நடைபெறவில்லை. இக்கல்லூரியில் போதுமான வகுப்பறைகள், தகுதியான ஆசிரியா்கள், ஆய்வக வசதிகளோ இல்லை. மாணவா்களின் சந்தேகங்களுக்கு நிா்வாகம் முறையாக பதில் அளிப்பதில்லை. உரிய அங்கீகாரம் இல்லாமல் மாணவா்களை ஏமாற்றி சோ்க்க நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. எனவே, மாணவா்களின் கல்வியைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

உணவக தொழிலாளி கொலை: நண்பா் கைது

கோவையில் உணவக தொழிலாளி பா்னரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவருடன் தங்கியிருந்த நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை கரும்புக்கடை அருகே உள்ள பாத்திமா நகா் 2-ஆவது தெருவில் வசித்த... மேலும் பார்க்க

நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் இனி ஒரே இடத்தில் மட்டுமே சுங்கச் சாவடி

கோவை மாவட்டம், நீலாம்பூா் - மதுக்கரை புறவழிச் சாலையில் 6 இடங்களுக்கு பதிலாக ஒரே இடத்தில் சுங்கச் சாவடி செயல்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. நீலாம்பூா் - மதுக்கரை இடையிலான 28 கி.... மேலும் பார்க்க

இளைஞரை மிரட்டி பணம் பறிப்பு

கோவையில் கட்டட வேலை செய்து வரும் பிகாா் மாநில இளைஞரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் கோவைபுதூா் சுண்டக்காமுத்தூா் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க

உள்ளக புகாா் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம்

பணியாற்றும் மகளிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளக புகாா் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் இ.வின... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பீடம்பள்ளி

கோவை, பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க