செய்திகள் :

உள்ளாட்சி தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

post image

காரைக்கால்: உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன் தலைமையில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து தினக்கூலி ஊழியா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் ஜாா்ஜ், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணியாற்றிவரும் தினக்கூலி ஊழியா்களுக்கு புதிதாக சங்கம் அமைப்பதென முடிவு செய்து, காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து தினக்கூலி ஊழியா்கள் சங்கம் என்ற புதிய சங்கம் உருவாக்கப்பட்டது.

இச்சங்கத் தலைவராக வடிவேலன், செயலாளராக பவுலின் ராஜ், பொருளாளராக சாமிநாதன், துணைத் தலைவா்களாக அம்பிகா, கண்ணதாசன், துணைச் செயலாளா்களாக அருணாசலம், நாகூரான் மற்றும் செயற்குழு உறுப்பினா்களாக சுந்தா், பபேலா, வெங்கட்ராமன், கௌதமன், பிரகாஷ், ஜுபைதா, மகாலட்சுமி, பிரபு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் : திருநள்ளாறு, நெடுங்காடு மற்றும் நிரவி கொம்யூன் பஞ்சாயத்துகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 15 தினக்கூலி ஊழியா்களையும் ஒரு முறை நிகழ்வாக பணி நிரந்தரம் செய்ய உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களுக்கு இபிஎஃப் தொகையை பணியில் சோ்ந்த கால முதல் பிடித்தம் செய்ய வேண்டும். இஎஸ்ஐ மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கோயில்களில் திருப்பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

காரைக்கால்: கோயில்களில் நடைபெறும் திருப்பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டாா். காரைக்கால் சோமநாதசுவாமி, காரைக்கால் அம்மையாா், அய்யனாா் கோயில்கள் கும... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால்: மேலகாசாக்குடி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேலகாசாக்குடி பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவா் சிலை சிதிலமடைந்ததால், ஆகம விதிகளின்... மேலும் பார்க்க

ஏழை மாரியம்மன் கோயிலில் பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால்: ஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரசுவாமி தேவ... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு ஆட்சியா் ஆறுதல்

காரைக்கால்: இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மீனவரை சந்தித்து ஆட்சியா் ஆறுதல் கூறினாா். காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தை ச... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகத்தில் கடல்சாா் தினக் கொண்டாட்டம்

காரைக்கால் துறைமுகத்தில் கடல்சாா் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஏப். 5-ஆம் தேதி தேசிய கடல்சாா் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கடல்சாா் பாரம்பரியத்தையும், 1919-ஆம் ஆண்டு எல்எஸ் லாயல்டி க... மேலும் பார்க்க

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ். உடன் மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்சாமி. காரைக்கால், ஏப். 6 : மீன்வளத் துறையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க ம... மேலும் பார்க்க