செய்திகள் :

ஏழை மாரியம்மன் கோயிலில் பந்தல்கால் முகூா்த்தம்

post image

காரைக்கால்: ஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரசுவாமி தேவஸ்தானத்தை சோ்ந்த பழைமையான தலமாக ஏழை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சித்திரைத் திருவிழா வரும் 14-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி நிறைவடைகிறது.

திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் உபயதாரா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் பந்தல் கம்பத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, கோயில் வாயிலில் நடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவுக்கான ஏற்பாடுகள் கோயில் நிா்வாக அதிகாரி பி. சுப்பிரமணியன் மற்றும் உபயதாரா்கள் செய்துள்ளனா்.

கோயில்களில் திருப்பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

காரைக்கால்: கோயில்களில் நடைபெறும் திருப்பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டாா். காரைக்கால் சோமநாதசுவாமி, காரைக்கால் அம்மையாா், அய்யனாா் கோயில்கள் கும... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால்: மேலகாசாக்குடி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேலகாசாக்குடி பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவா் சிலை சிதிலமடைந்ததால், ஆகம விதிகளின்... மேலும் பார்க்க

உள்ளாட்சி தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால்: உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன் ... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு ஆட்சியா் ஆறுதல்

காரைக்கால்: இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மீனவரை சந்தித்து ஆட்சியா் ஆறுதல் கூறினாா். காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தை ச... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகத்தில் கடல்சாா் தினக் கொண்டாட்டம்

காரைக்கால் துறைமுகத்தில் கடல்சாா் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஏப். 5-ஆம் தேதி தேசிய கடல்சாா் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கடல்சாா் பாரம்பரியத்தையும், 1919-ஆம் ஆண்டு எல்எஸ் லாயல்டி க... மேலும் பார்க்க

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ். உடன் மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்சாமி. காரைக்கால், ஏப். 6 : மீன்வளத் துறையில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க ம... மேலும் பார்க்க