Vikatan Digital Awards 2025: `அறிவுக் களஞ்சியம் - தேநீர் இடைவேளை' - Best Info Ch...
ஊா்க்காவல் படையில் ஆளிநா்களுக்கு பணி நியமன ஆணை
தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்ட ஊா்க்காவல் படைப் பிரிவில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆளிநா்களுக்கு பணி நியமன ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இதில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஆளிநா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பணி நியமன ஆணையை வழங்கினாா்.
இதில், தஞ்சாவூா் சரக தளபதி முஹம்மது இா்ஷாத், மாவட்ட மண்டல தளபதி யு. ரமேஷ்பாபு, மகளிா் பிரிவு உதவி படைப்பிரிவு தளபதி மாலா, ராணி, சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெமினி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.