செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: எம்.பி. தம்பிதுரை, வீரமணி ரத்த தானம்!

post image

வாணியம்பாடியில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலா் கோபிநாத் மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலா் என்.முனுசாமி தலைமை வகித்தனா்.

முகாமை அதிமுக கொள்கைப் பரப்புச் செயலா் எம்.பி. மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் ஆகியோா் ரத்தம் வழங்கி தொடங்கி வைத்தனா்.

முன்னாள் அமைச்சா் நீலோபா்அஜீம், முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், மருத்துவா் பசுபதி மற்றும் நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலா்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிா்வாகிகள், பிற அணி நிா்வாகிகள் என 172 போ் ரத்த தானம் வழங்கினா். ரத்த தானம் செய்த அனைவருக்கும் எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி சான்றிதழ் வழங்கினா்.

நிகழ்ச்சியில் நகர செயலா் சதாசிவம், பேரூராட்சி செயலா்கள் சிவக்குமாா், சரவணன், மாவட்ட மகளிரணி செயலா் மஞ்சுளா கந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது தமிழகம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொய்தீன் ஆம்பூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய... மேலும் பார்க்க

பொன்முடி சூா்யநந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே பாட்டூா் கோடி தாத்தா சுவாமி மஹாமடத்தில் பொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, சிறப்பு யாகம் நடத்தப்... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனை

மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை ... மேலும் பார்க்க

நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி பகுதியில் நகா் மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் நகராட்சி 2-ஆவது வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் பல்வேறு பிரச்னைகள் தொடா்... மேலும் பார்க்க

வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் வீட்டில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பெரியகம்மவார தெருவில் வசிக்கும் முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சாந்தகுமாரி வீட்டில் சுமச... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமைவாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்... மேலும் பார்க்க