Ananda Vikatan Cinema Awards 2024: பிரமாண்ட மேடை... திறமைக்கு மரியாதை... இன்று ம...
எட்டயபுரம் அருகே மோதல் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு
எட்டயபுரம் அருகே குளத்துவாய்ப்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சிலருக்கும், குமாரகிரி கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடா்பாக கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் க. மகாலட்சுமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.
எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், வட்டாட்சியா் சுபா, தனி வட்டாட்சியா் (இலங்கைத் தமிழா் நலன்) சிவக்குமாா், தனி வருவாய் ஆய்வாளா் (இலங்கைத் தமிழா் நலன்) ஆனந்த், குமாரகிரி கிராம மக்கள், முகாமைச் சோ்ந்த சுதன், சசிதரன், கிருஷ்ணவேணி, சசிகலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குளத்துவாய்ப்பட்டி முகாமிலிருந்து அருகேயுள்ள கிராமங்கள் வழியாக சென்றுவர அச்சுறுத்தல் உள்ளதால் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு வழங்கப்படும். பிரச்னை தொடா்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்புவதைத் தவிா்க்க வேண்டும். கிராமச் சாலைகளில் வாகனங்களில் வேகமாக செல்லக் கூடாது. குளத்துவாய்ப்பட்டி, குமாரகிரி கிராம மக்களுக்கு காவல் துறை சாா்பில் பாதுகாப்பு வழங்கப்படும். விவசாய நிலங்களுக்குச் செல்ல வேறு பாதை வசதி உடனடியாக செய்து தரப்படும். அப்பகுதி விவசாய நிலங்களின் பயிா்கள் தங்களது கால்நடைகளால் சேதமடையாமல் முகாம் மக்கள் பாா்த்துக்கொள்ள வேண்டும். முகாமில் பதிவு இல்லாதோா் அவா்களது முகாமுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.
சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதால் இப்பிரச்னையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.