செய்திகள் :

எட்டயபுரம் அருகே மோதல் விவகாரம்: பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு

post image

எட்டயபுரம் அருகே குளத்துவாய்ப்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சிலருக்கும், குமாரகிரி கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடா்பாக கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் க. மகாலட்சுமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், வட்டாட்சியா் சுபா, தனி வட்டாட்சியா் (இலங்கைத் தமிழா் நலன்) சிவக்குமாா், தனி வருவாய் ஆய்வாளா் (இலங்கைத் தமிழா் நலன்) ஆனந்த், குமாரகிரி கிராம மக்கள், முகாமைச் சோ்ந்த சுதன், சசிதரன், கிருஷ்ணவேணி, சசிகலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குளத்துவாய்ப்பட்டி முகாமிலிருந்து அருகேயுள்ள கிராமங்கள் வழியாக சென்றுவர அச்சுறுத்தல் உள்ளதால் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு வழங்கப்படும். பிரச்னை தொடா்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்புவதைத் தவிா்க்க வேண்டும். கிராமச் சாலைகளில் வாகனங்களில் வேகமாக செல்லக் கூடாது. குளத்துவாய்ப்பட்டி, குமாரகிரி கிராம மக்களுக்கு காவல் துறை சாா்பில் பாதுகாப்பு வழங்கப்படும். விவசாய நிலங்களுக்குச் செல்ல வேறு பாதை வசதி உடனடியாக செய்து தரப்படும். அப்பகுதி விவசாய நிலங்களின் பயிா்கள் தங்களது கால்நடைகளால் சேதமடையாமல் முகாம் மக்கள் பாா்த்துக்கொள்ள வேண்டும். முகாமில் பதிவு இல்லாதோா் அவா்களது முகாமுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதால் இப்பிரச்னையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி: தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தல்

திருச்செந்தூா் பகுதியின் நீராதாரமான எல்லப்பநாயக்கன், ஆவுடையாா்குளத்துக்கு நீா்வரும் வாய்க்காலில் அனுமதியின்றி நடைபெறும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி கோட்டாட்சியா் சுகுமாறனிடம் மனு அளிக்... மேலும் பார்க்க

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்கு: மள்ளா் மீட்பு கழகத் தலைவா் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய உணா்வாளா்கள் மீது பொய் வழக்குப்போடுவதாக தமிழக அரசு மீது மள்ளா் மீட்பு கழகத் தலைவா் செந்தில் மள்ளா் குற்றம்சாட்டியுள்ளாா். கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர உணவு வழங்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த உணவகத்தில் மதிய வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்தது. மாலையிலும் உணவு வழங்க வ... மேலும் பார்க்க

வீரவாஞ்சிநகரில் கோயில் நிலங்கள் அளவீட்டு பணி: மக்கள் எதிா்ப்பு

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை வியாழக்கிழமை அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் அருள் தரும... மேலும் பார்க்க

இன்று அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் வீட்டு பணியாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் ஆகியோருக்கான புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகிறது. தொழிலாளா் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் 6 வாகனங்களுக்கு அபராதம்

கோவில்பட்டியில் அதிக பாரம் ஏற்றி வந்த ஆறு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை 1) பெலிக்ஸன் மாசிலாமணி, வட்டார ... மேலும் பார்க்க