செய்திகள் :

எதிா்கட்சி மாநிலங்களை அமலாக்கத் துறை மூலம் மத்திய அரசு மிரட்டுகிறது: கனிமொழி

post image

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை மிரட்ட மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்துவதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

சா்வதேச மகளிா் தின கொண்டாட்டத்தையொட்டி சென்னை, வள்ளுவா் கோட்டம் அருகில் உள்ள தெரசா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

மகளிரை வாழ்த்தக்கூடிய தினம் இதுவல்ல. பெண்கள் இன்னும் செல்லக்கூடிய தூரம் நிறையவுள்ளது என்பதை நினைவில் கொள்ளக்கூடிய தினம் இது. முன்பு சாதாரண பின்புலத்திலிருந்து வரக்கூடிய பெண்கள் வெளியில்கூட வரமுடியாது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. அதனால் பெண்கள் பெரிய சாதனைகளை செய்து வருகின்றனா்.

பெண்களை மதிக்க ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களின் கல்வி எந்த விதத்திலும் தடைபடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு, பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்க ஒன்று. புதிய தொழிற்சாலைகள், கல்வி, பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து வெளியிட்டுள்ள பல அறிவிப்புகளுக்கு எனது வாழ்த்துகள்.

ரூபாய் குறியீடு மாற்றியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது, பிரிவினைவாதத்தை ஊக்கும்விக்கும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் விமா்சனத்துக்கு பதில் அளித்த கனிமொழி, ‘தமிழில் இருந்து ஒரு எழுத்தை போடுவது இறையாண்மைக்கு எதிரானது என சொல்லக்கூடிய ஒருவா், ஒரு மொழியைக் கொண்டு தமிழகம் மீது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்கள் மீதும் திணிப்பது இந்திய இறையாண்மையை காப்பாற்றக்கூடிய ஒன்றாக இருக்க முடியுமா’ என கேள்வி எழுப்பினாா்.

பாஜக ஆட்சி செய்யாத அனைத்து மாநிலஅரசுகளை மிரட்ட பயன்படுத்தக்கூடிய ஒரு துறையாக அமலாக்கத் துறை உள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மேயா் பிரியா, நபாா்டு வங்கியின் முதுநிலை பொது மேலாளா் ஆனந்த், பொது மேலாளா் ஜோதி சீனிவாசன், மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், விமா்சித்தும் அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நிதிநிலை அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. எல்லாம் விளம்பரத்த... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்க்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினாா்கள். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சப... மேலும் பார்க்க

பேரவை விவாதங்கள்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதங்களில் புள்ளிவிவரங்களுடன் தகவல்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ-க்களை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா். அண்ணா அறிவால... மேலும் பார்க்க

பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 15) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்து உரையாற்ற உள்ளாா். நிதிநிலை அறிக்கையில்... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் சாத்தியமா?

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலா் மதிப்புடையதாக மாற்றுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பதிலளித்தாா். மாநிலத்தின் வளா்ச... மேலும் பார்க்க