எத்தனால், மெத்தனால் விற்பனை குறித்து போலீஸாா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனால், மெத்தனால் விற்பனை குறித்து போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளா் ஆல்பா்ட்ஜான், உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் எத்தனால், மெத்தனால் போன்ற வேதிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டாா்.
அதன்படி, தூத்துக்குடி கலால் உதவி ஆணையா் கல்யாண்குமாா், மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் கபீா்தாசன் ஆகியோா் தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிறுவனங்களில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
சோதனையின் போது, தனியாா் நிறுவனத்தில் உள்ள இருப்பு பதிவுகள், கொள்முதல், விற்பனை ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டன. எத்தனால், மெத்தனால் கையாளப்படும் முறை, சேமித்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், எத்தனால், மெத்தனால் ஆகியவற்றை எந்தவித உரிமமும் இன்றி வைத்து இருந்தாலோ, விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு அல்லது போலீஸ் கட்டுப்பாட்டுஅறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.