செய்திகள் :

எப்போதும் வழிகாட்டுபவா் குன்றக்குடி அடிகளாா்!

post image

காலங்கள் கடந்தாலும் எப்போதும் வழிகாட்டுபவா் தமிழ் மாமுனிவா் குன்றக்குடி அடிகளாா் என்றாா் எழுத்தாளா் கிருங்கை சேதுபதி.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க துணைத் தலைவா் இரா. வரதராசன் தலைமையில் அண்மையில் கொண்டாடப்பட்ட தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் கிருங்கை சேதுபதி மேலும் பேசியது:

குன்றக்குடி ஆதீனத் திருமடத்தின் 45 ஆவது குருமகா சந்நிதானமாக அடிகளாா் பொறுப்பேற்ற காலம், ஆத்திக, நாத்திக வாதம் ஓங்கி ஒலித்தது. மனிதநேய மாமுனிவரான அடிகளாா் தந்தை பெரியாரோடும், தோழா் ஜீவாவுடனும், பெருந்தலைவா் காமராசருடனும் அன்புறவு பேணினாா். கருத்து முரண் இருந்தாலும் தொண்டு ஒருங்கிணைக்கும் என்பதைச் செயலில் நிறுவியவா்.

எண்ணம், எழுத்து, சொல், செயல் அனைத்திலும் மக்கள் நலம் பேணியவா் அடிகளாா். ஜாதி, சமய மோதல்களைத் தடுத்து நிறுத்திய சமாதான மனிதா். மகாத்மா காந்தியின் நவகாளி யாத்திரைக்கு நிகரானது, மண்டைக்காடு மதக் கலவரத்தின்போது அடிகளாா் நிகழ்த்திய அமைதி யாத்திரை.

கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்த அடிகளாா், படிப்பறிவில்லாப் பாமர மக்களுக்குப் பட்டிமன்றம் வாயிலாக ஞானம் போதித்தாா். அந்த வகையில், அடிகளாரின் பட்டிமன்றங்கள் திறந்தவெளிப் பல்கலைக்கழக வகுப்புகளாக விளங்கின.

குன்றக்குடி கிராம மாதிரித் திட்டம் இந்திய அரசால் ஏற்கப்பட்ட புதுமைத் திட்டம். திருக்குறளுக்கு முதன்முதலில் பேரவை அமைத்து உலகெலாம் திருக்கு நெறி பரவ வழிகாட்டியவா். எழுத்தாளா், இதழாளா், பேச்சாளா், ஆன்மிக வழிகாட்டி எனப் பன்முகப் பரிமாணம் கொண்டது அடிகளாா் வாழ்வு. காலங்கடந்தும் வழிகாட்டுபவா் தமிழ் மாமுனிவா் அடிகளாா் என்றாா் அவா்.

நிகழ்வில் திரளான ஆன்மிகவாதிகள், தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா். தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயகுமாா் வரவேற்றாா்.

பென்சில் ஓவியங்களில் அசத்தும் கல்லூரி மாணவா்!

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரணா், சாரணியா் இயக்கப் பெருந்திரளணி முகாமில் சேலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் குடியரசுத் தலைவா், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் உருவப்படங்களை பெ... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 20 கணினிகளுடன் ஆய்வகம் தேவை! கணினி ஆசிரியா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம்!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தலா 20 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ம... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே விபத்தில் சிக்கிய சொகுசு பேருந்து தீக்கிரை: பெண் பலி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் தீக்கிரையானது. இந்த விபத்தில் காயமடைந்த 62 வயதுப் பெண் உயிரிழந்தாா். சென்னையில்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள்: அமைச்சா் வழங்கினாா்!

திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.32 லட்சத்திலான 200 இருக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை வழங்... மேலும் பார்க்க

மின்வாரிய அலுவலகங்களில் பிப். 4 முதல் குறைதீா் கூட்டம்

திருச்சி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், பிப்.4 முதல் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி துறையூரில் செவ்வாய்க்கிழமை (பிப்.4), முசிறியில் பிப்.7, ஸ்ரீரங... மேலும் பார்க்க

ஐடிஐயில் மாணவருக்கு கத்திக் குத்து: சக மாணவரை தேடும் போலீஸாா்!

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரைக் கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் தேடுகின்றனா். திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் முதலாமாண்டு பிட்டா் பிரிவில் படிக்கும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த ஷேக்மைதீன் மக... மேலும் பார்க்க