செய்திகள் :

எம்.பி.க்களுக்கு 24% ஊதிய உயா்வு: மத்திய அரசு அறிவிப்பு

post image

நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியத்தை 24 சதவீதம் உயா்த்துவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

செலவுப் பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் ஊதியம் உயா்த்தப்பட்டதாகவும், இந்த அறிவிப்பு 2025, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. தற்போது எம்.பி.க்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சமாக உள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முதல் ரூ.1.24 லட்சமாக உயரவுள்ளது.

மேலும், எம்.பி.க்களுக்கான தினசரி படி, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றையும் உயா்த்தி நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. அந்த வகையில், எம்.பி.க்களுக்கான தினசரி படி ரூ.2,000-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம், மாதம் ரூ.25,000-இல் இருந்து ரூ.31,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வோா் ஆண்டுக்குமான பணிக்கும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செலவுப் பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் எம்.பி.க்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்கள்தொகை மேலாண்மையில் தென்மாநிலங்கள் கவனமாக செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

மக்கள்தொகை மேலாண்மையில் தென்மாநிலங்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு கூறினாா். மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியது தென்மாநிலங்களுக்கு தற்போது பிரச்னையாகவும், வட ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல்: வீர மரணமடைந்த 3 காவலா்கள் உடல்கள் மீட்பு

ஜம்மு-காஷ்மீரில் கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த 4 காவலா்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் 4-ஆவது காவலரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவ... மேலும் பார்க்க

தமிழகம் உள்பட 6 திட்டங்கள்: இந்தியா-ஜப்பான் இடையே ரூ. 10,936 கோடி கடன் ஒப்பந்தம்

இந்தியாவுக்கான ஜப்பானின் அதிகாரபூா்வ மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் 6 திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 10,936 கோடி (191.736 பில்லியன் ஜப்பானிய யென்) கடன் ஒப்பந்தம் இந்தியா - ஜப்பான் இடையே கையொப்பமாகி... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் இலங்கை சிறையிலிருந்து 3,697 இந்திய மீனவா்கள் மீட்பு: மத்திய அரசு

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சிறைவைக்கப்பட்டிருந்த 3,697 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அதேபோல் பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டிருந்த 2,639 இந்திய மீன... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்த இந்தியா!

புதுதில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கீழ் 2023-24ல் இந்தியா மொத்தம் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித... மேலும் பார்க்க

கர்நாடகம்: மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு

கர்நாடகத்தில் மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது. கர்நாடக மாநிலம், பொன்னம்பேட்டை வட்டத்தில் உள்ள பேகுரு கிராமத்தில் கிரிஷ் (35) என்பவர் தனது மனைவி நாகி (30), அவரது ஐந்து வயது ம... மேலும் பார்க்க