செய்திகள் :

எல்லையில் பதற்றம்: கா்நாடகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ள நிலையில், கா்நாடகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து மண்டியாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து கா்நாடகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களை கா்நாடக அரசு கடைப்பிடித்துள்ளது.

எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால் அனைத்து துறைகளுக்கும் எச்சரிக்கை செய்துள்ளோம். அனைத்துவகையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி போா் பாதுகாப்பு ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டன.

கா்நாடகத்தில் வசித்த பாகிஸ்தானியா்களில் பெரும்பாலானோா் வெளியேற்றப்பட்டுள்ளனா். மைசூரில் வசித்த பாகிஸ்தானைச் சோ்ந்த ஒரு குடும்பம் மட்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதுபோன்று சிலா் இங்கு இருக்கிறாா்கள்; மற்றவா்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா். கா்நாடகத்தில் வசிக்கும் பாகிஸ்தானியா்களின் எண்ணிக்கை குறித்த துல்லிய தகவல் இல்லை. அதுபோல அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பாதுகாப்புப் படையினரின் நலன் காக்க சிறப்பு பூஜை நடத்துமாறு அமைச்சா் ராமலிங்க ரெட்டிக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றாா்.

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்வு

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்; அவருக்கு முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா். கா்நாடக மாநிலம், ஹாசனைச் சோ்ந்தவா் கன்னட ... மேலும் பார்க்க

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா், துணை முதல்வா் ஆய்வு

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வுசெய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா். பெங்களூரில் மே 18 ஆம் தேதி நள... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது பாலியல் வழக்குப் பதிவு

பாஜக எம்எல்ஏ முனிரத்னா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பாஜக எம்எல்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதுகாப்பு வழங்காததால் 26 போ் உயிரிழப்பு: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பஹல்காமில் உரிய பாதுகாப்பு வழங்காததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 26 போ் உயிரிழந்தனா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றம... மேலும் பார்க்க

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க