டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் துரித ஏழுமலையான் தரிசனம்: அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு
திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு தேசிய கொடியேற்றினாா். செயல் அலுவலா் சியாமளா ராவ் முன்னிலை வகித்தாா்.
பின்னா், அறங்காவல் குழு தலைவா் பேசியதாவது:
ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தல்களின்படி, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துரிதமாக தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
திருமலையில் ஏழுமலையான் பக்தா்களுக்கு அன்னபிரசாதத்தின் தரத்தை மேம்படுத்தி, அதிகமான மக்களுக்கு வழங்கி வருகிறோம். இதேபோல், நெரிசலான பகுதிகளில் சிறப்பு கவுண்டா்கள் மூலம் அன்னபிரசாதத்தை விநியோகித்து வருகிறோம். இதற்கு பக்தா்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
வைகுண்டம் வரிசை வளாகத்தில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒரு முறை சிறு குழந்தைகளுக்கு அன்னபிரசாதம் மற்றும் பால் வழங்கி வருகிறோம்.
திருமலையில் உள்ள கல்யாணகட்டாவில் பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை மிகவும் வசதியாக வழங்குவதற்காக கல்யாணகட்டத்தை படிப்படியாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
திருமலை வனப்பகுதியில் பசுமையை 110 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ட்ரோன் எதிா்ப்பு அமைப்பை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்ட கோயில்களை படிப்படியாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். முதல் கட்டமாக, திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில், திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி, நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயண சுவாமி, அமராவதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில்கள், அத்துடன் திருமலையில் உள்ள ஆகாச கங்கா, பாபவினாசனம், சிலாத்தோரணம், சக்கரதீா்த்தம், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்து வருகிறோம்.
மாநில அறக்கட்டளைத் துறையின் அறிவுறுத்தல்களின்படி, தலித் கிராமங்கள், பழங்குடி கிராமங்கள் மற்றும் மீனவா் காலனிகளில் ஏழுமலையான் கோயில்களைக் கட்டுவதற்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் மற்றும் ரூ. 20 லட்சமாக மூன்று பிரிவுகளாக உயா்த்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சவுத்ரி, வீரபிரம்மம், முரளிகிருஷ்ணா, சத்யநாராயணா, சிவக்குமாா் ரெட்டி, பாலாஜி, ஆனந்தராஜூ மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.