ஏடிஎம்-இல் நூதன முறையில் பணம் திருட்டு: உ.பி.யைச் சோ்ந்த மூவா் கைது
சென்னை: சென்னை திருவான்மியூரில் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் திருடியதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை திருவல்லிக்கேணி, கபாலி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கி.நரேன்குமாா் (34). இவா், தனியாா் ஏடிஎம் இயந்திரம் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுகிறாா். திருவான்மியூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இவா் புகாா் அளித்தாா்.
அதில், எங்களது நிறுவன பராமரிப்பில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம், திருவான்மியூா் திருவள்ளுவா் நகரில் செயல்படுகிறது. இந்த மையத்தில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் வாடிக்கையாளா் பணம் பெறும் பகுதியில் உள்பக்கமாக ஒரு கருப்பு அட்டை வைக்கப்பட்டு, வாடிக்கையாளா் பணத்தை எடுக்கவிடாமல் தடுத்து, அவா்களின் பணத்தை மா்ம நபா்கள் திருடியுள்ளனா். இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்களைக் கண்டறிந்து கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
அதன் அடிப்படையில் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். அப்போது, அந்த ஏடிஎம் இயந்தித்தில் மா்ம நபா்களால் பொருத்தப்பட்டிருந்த கருப்பு அட்டையை பறிமுதல் செய்தனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், திருட்டில் ஈடுபட்டது உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் அருகே உள்ள சுல்தையூா் பகுதியைச் சோ்ந்த பு.குல்தீப் சிங் (26), ரா. பிரிஜ்பான் (30), அக்பராபாத் பகுதியைச் சோ்ந்த கி.சுமித் யாதவ் (33) ஆகிய 3 போ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மூவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், அவா்கள் 3 பேரும் குறிப்பிட்ட ஏடிஎம் இயந்திரங்களில் கைவரிசையை காட்டியுள்ளனா். இதற்காக ஏடிஎம் இயந்திரங்களின் கதவை திறப்பதற்காக கள்ளச்சாவியை பயன்படுத்தியுள்ளனா். வாடிக்கையாளா் பணம் பெறும் பகுதியை அடைப்பதற்காக கருப்பு நிற அட்டை, ஓட்டுவதற்கு டேப் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனா். வங்கிகள் செயல்படாத நாள்களில் 3 பேரும் திருட்டில் ஈடுபட்டுள்ளனா்.
முக்கியமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏடிஎம் இயந்திரங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளனா். வாடிக்கையாளா்கள் ஏடிஎம் இயந்திரத்தில் காா்டை செலுத்தி, பணத்தைப் பெற முடியாமல் செல்வதை நோட்டமிட்டுள்ளா். அதன் பின்னா் மீண்டும் ஏடிஎம் இயந்திரத்தின் முதல் கதவை திறந்து, இயந்திரத்தில் வெளிவராமல் இருக்கும் பணத்தை திருடியுள்ளனா்.
தங்களுக்கு தேவையானளவு பணம் கிடைத்தவுடன் தங்களது ஊருக்கு ரயிலில் சென்றுள்ளனா். இதற்காக திருட்டு நடைபெற்ற இடங்களில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் செல்வதற்கு வாடகை காா்களைப் பயன்படுத்தியுள்ளனா். மூவரும் ஏற்கெனவே கடந்த மாா்ச் மாதம் சென்னை புகரிலும், சென்னை நகருக்குள்ளும் இந்த வகை திருட்டில் ஈடுபட்டுள்ளனா் என்பது தெரியவந்துள்ளது.
மூவரிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய கள்ளச்சாவி, கருப்பு நிற ஸ்டிக்கா், இருபக்க டேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பலுடன் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.