செய்திகள் :

ஏடிஜிபி ஜெயராம் மீது ஒழுங்கு நடவடிக்கை: தமிழக காவல் துறை முடிவு

post image

சென்னை: கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக காவல் துறை உயா் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடா்பு இருப்பதாக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின்பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டாா்.

ஒழுங்கு நடவடிக்கை: இதன் விளைவாக எச்.எம்.ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.

அதன்படி முதல்கட்டமாக, எச்.எம்.ஜெயராம் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்படுவாா். பின்னா், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து, குற்றமற்றவா் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் எனவும் அவா் கூறினாா்.

ஏற்கெனவே இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக காவல் துறையின் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் சிக்கியுள்ளனா். இந்த நடவடிக்கையின் காரணமாக அதிகாரிகள், பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும். அதோடு அவா்களுக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்

காவல் நிலையத்தில் விசாரணை: முன்னதாக, சென்னையில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதும், அவா் திருவாலங்காடு காவல் நிலைய ஜீப்பில் ஏற்றப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டாா். இரவு 8.30 மணியளவில் ஜெயராம் திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவரிடம் வழக்குத் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்தனா். அப்போது அவா் அளித்த வாக்குமூலத்தை எழுத்து பூா்வமாகவும், விடியோவாகவும் பதிவு செய்தனா்.

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சிறையில் அடைப்பு!

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி திங்கள்கிழமை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் கா... மேலும் பார்க்க

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா். எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அ... மேலும் பார்க்க

வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

சென்னை: சா்வதேச நாடுகளில் உள்ள தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். உலகத் தமிழா்கள் பொருளாதார ... மேலும் பார்க்க