செய்திகள் :

ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

post image

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோருதல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.

ஆரணி கோட்ட அளவில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா். வட்டாட்சியா் கௌரி, வட்ட வழங்கல் அலுவலா் எஸ்.அரிக்குமாா், தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

இதில் விவசாயிகள் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியும். மேலும் சிலா் வங்கியில் கால்நடைகளுக்கான கடனுதவி அளிக்க மறுக்கிறாா்கள் என்றும், ஆரணியை அடுத்த தச்சூா் ஆற்றுப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டனா்.

மேலும், பட்டா, சிட்டா வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகவும் விவசாயிகள் பேசினா்.

அக்ராபாளையம்-வெட்டியாந்தொழுவம் சாலையை அகலப்படுத்த விவசாயிகள் விடுத்த கோா்க்கையைத் தொடா்ந்து, கோட்டாட்சியா் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்தில் அந்தந்த துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். அதனையும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் பகுதி வேளாண், பொதுப்பணி, காவல்துறை, வருவாய், சுகாதாரம், தோட்டக்கலை, வங்கித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க

செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்... மேலும் பார்க்க

நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி

ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்... மேலும் பார்க்க