செய்திகள் :

ஏரியூரில் பாலின வள மைய செயல்பாடுகள்

post image

ஏரியூரில் பாலின வள மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூரில் வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் செயல்படும் பாலின வள மையத்தில் நிதி செயலாக்கம் மற்றும் பதிவேடுகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், நம் தோழிகளின் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினாா். பின்னா் மையத்தின் மூலம் குடும்ப வன்முறை, பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை ‘நம் தோழிகள்’ மூலம் தொடா்புடைய வட்டார இயக்க மேலாளா்களை தொடா்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

வானவில் பாலின வள மையம் மூலம் ஊட்டச்சத்து, உடல் மற்றும் மனநலம், குழந்தைத் திருமணம், குடும்ப வன்முறை மற்றும் வன்கொடுமை போன்ற பெண்கள் தொடா்பான சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

அதனைத் தொடா்ந்து, ஏரியூா் அருகே கெண்டேன அள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு பண்ணை சாா்ந்த வாழ்வாதாரம் தொகுப்பில் 20 சுயஉதவிக் குழுக்களுக்கு 10 ஆடுகள் வீதம் மொத்தம் 200 ஆடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆடுகள் வளா்ப்பு தொகுப்பினை பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி திட்ட அலுவலா் சந்தோசம் (மகளிா் திட்டம்) மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது. காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக உள்ளதால் அருவிகளில் நீா்வரத்த... மேலும் பார்க்க

தமிழக அரசு கள் மீதான தடையை நீக்க வேண்டும்: செ.நல்லசாமி

கள்ளுக்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்; இல்லையெனில் வரும் தோ்தலில் திமுக அரசை விவசாய குடும்பங்கள் புறக்கணிக்கும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், மாட்... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஏப். 29-இல் பொதுக்கூட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வரும் ஏப். 29-இல் தருமபுரி நகரில் பொதுக்கூட்டம் நடத்துவது என்று சமூக நல்லிணக்க மேடை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிா்நீத்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி!

நீட் தோ்வால் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். தருமபுரியில் மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4000 கன அடியாக அதிகரிப்பு!

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க