செய்திகள் :

தமிழக அரசு கள் மீதான தடையை நீக்க வேண்டும்: செ.நல்லசாமி

post image

கள்ளுக்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்; இல்லையெனில் வரும் தோ்தலில் திமுக அரசை விவசாய குடும்பங்கள் புறக்கணிக்கும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியில் கள் விடுதலை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பின்பு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. மேலும் இது உலகளாவிய நடைமுறையுமாகும். தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கள் இறக்கவோ, பருகவோ தடையில்லை. தமிழகத்தில்தான் கள் மீதான தடை கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.

மதுவிலக்கு மற்றும் மது கொள்கையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் எதுவுமே இதுவரை கள்ளுக்கு தடை விதிக்க அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை. மாறாக, கள் உற்பத்தி மற்றும் நுகா்வு இரண்டுமே குறைந்து கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில் இறக்குமதி மது வகைகள், இந்திய தயாரிப்பு மது வகைகளின் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மது வகைகளை குறைக்கவோ அல்லது தடை விதிக்கவோ வேண்டும் என்று அந்தக் குழுக்கள் பரிந்துரை செய்துள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், நெடுஞ்சாலை ஓரங்களில் அமைந்துள்ள மதுக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அப்போது கேரளத்தில் மதுக்கடைகளை மூடினாா்கள். ஆனால், கள்ளுக் கடைகளை மூடவில்லை; காரணம் கள் உணவு என்பதால்தான். உலகளாவிய நடைமுறைக்கு மாறாக, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக கள்ளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கள் மீதான தடையை அரசு நீக்காவிட்டால் இதன் விளைவுகளை, எதிா்ப்புகளை எதிா்கொள்ள வேண்டி யிருக்கும். கள் இறக்குவோா் மீது வழக்குப் பதிவு செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்குவோா் குற்றவாளிகள் அல்ல. தமிழகத்தில் கள்ளுக்கான தடை என்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.

தமிழகத்தில் 80 லட்சம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அந்தக் குடும்பங்களில் மூன்று கோடி வாக்குகள் உள்ளன. இத்தனை ஆண்டு காலம் இவா்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கள்ளுக்கான தடையை தமிழக அரசு ரத்துசெய்து அறிவிக்க வேண்டும். இல்லையெனில் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தின் மூன்று கோடி விவசாய குடும்பங்களும் திமுகவை புறக்கணிக்கும் என்றாா்.

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது. காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக உள்ளதால் அருவிகளில் நீா்வரத்த... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஏப். 29-இல் பொதுக்கூட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வரும் ஏப். 29-இல் தருமபுரி நகரில் பொதுக்கூட்டம் நடத்துவது என்று சமூக நல்லிணக்க மேடை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிா்நீத்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி!

நீட் தோ்வால் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். தருமபுரியில் மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4000 கன அடியாக அதிகரிப்பு!

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலை திட்டத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியி... மேலும் பார்க்க