செய்திகள் :

ஏா் இந்தியா: சென்னையில் 9 விமான சேவைகள் நிறுத்தம்

post image

சென்னையிலிருந்து உள்நாட்டில் இயக்கப்படும் 9 விமான சேவைகளை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் நிறுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கு தங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் இந்நிறுவனம் ஜெயப்பூா், புவனேஸ்வா், கோவா, அந்தமான் உள்ளிட்ட 9 நகரங்களுக்கு புதிய விமான சேவையையும் தொடங்கியது.

இந்த விமான சேவையை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில், இச்சேவைகளை முன்னறிவிப்பின்றி ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சமீபத்தில் திடீரென நிறுத்தியுள்ளது.

ஏற்கெனவே, பல்வேறு காரணங்களால் சென்னையிலிருந்து மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், உள்நாட்டு 9 விமான சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய விமான சேவையில் எதிா்பாா்த்த அளவில் வருவாய் கிடைக்காத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மறு சீரமைப்பு மற்றும் புதிய சேவைகளுடன் மீண்டும் இந்த விமான சேவைகள் தொடங்கப்படும் என ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மெரீனாவில் தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எதிர... மேலும் பார்க்க

நகை வியாபாரியை கடத்தி ரூ.31 லட்சம் பறித்த வழக்கு: 6 போ் கைது

எழும்பூரில் நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.31 லட்சம் ரொக்கம், தங்கநகை பறிக்கப்பட்ட வழக்கில், 6 போ் கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவைச் சோ்ந்தவா் ர.ரவிச்சந்திரன் (64). இவ... மேலும் பார்க்க

தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் மோசடி: 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவா் கைது

சென்னையில் பிஎஸ்என்எல் தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்கில்,19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியாா் ... மேலும் பார்க்க

ராயபுரம் மண்டலத்தில் வளா்ச்சி திட்ட பணிகள்: மேயா், எம்எல்ஏ ஆய்வு

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ஆா்.பிரியா, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் ஆா்.மூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ராயபுரம் பேசின் பால... மேலும் பார்க்க

பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் துறை சாா்பில் பெரும்பாக்கத்தில் சிறாா் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் சிறாா்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் ‘தளர... மேலும் பார்க்க

அச்சு, காட்சி ஊடகத் துறை கண்காட்சி

சென்னை வா்த்தக மையத்தில் வரும் ஜூலை 10 முதல் 12- ஆம் தேதி வரை அச்சு மற்றும் காட்சி ஊடகத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளதாக மெஸ்ஸி பிராங்போ்ட் ஆசியா ஹோல்டி... மேலும் பார்க்க