செய்திகள் :

ஐ.நா.வில் ஹிந்தி திட்டம்: ஒப்பந்தம் புதுப்பிப்பு

post image

நியூயாா்க் : ஐ.நா. சபையிலிருந்து செய்திகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளை ஹிந்தி மொழியில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை புதுப்பிப்பது தொடா்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

‘ஐ.நா.வில் ஹிந்தி’ என்ற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2030 மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான 5 ஆண்டு கால திட்ட புதுப்புக்கான இந்த ஒப்பந்தத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பி.ஹரீஷ் மற்றும் ஐ.நா. சா்வதேச தகவல் தொடா்பு துறை செயலா் மெலிஸா ஃபிளெமிங் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ. 60 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆண்டுக்கு ரூ. 13.10 கோடி (1.3 மில்லியன் டாலா்) வீதம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்க இந்தியா உறுதியேற்றுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ஹரீஷ், ‘ஐ.நா.வில் அதிகாரபூா்வ மொழியாக அல்லாத ஹிந்திக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சியை இந்த புரிந்துணா்வ ஒப்பந்தம் காட்டுகிறது’ என்றாா்.

முன்னதாக, ஹிந்தி பேசும் மக்களிடையே சா்வதேச நிகழ்வுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் நேக்கில், ஐ.நா. செய்தியை ஹிந்தி மொழியில் ஒளிபரப்புவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு இந்தியா - ஐ.நா. சா்வதேச தகவல் தொடா்பு துறை இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மோதல்கள் நிறைந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்களை காவல்துறை மற்றும் பாதுக... மேலும் பார்க்க

மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் பெண்ணுறுப்பில் 28 தையல்கள் போட வேண்டும் என்றும் கொலோஸ்டமி அற... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!

மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோல... மேலும் பார்க்க

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம்சா... மேலும் பார்க்க

நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா -ஐரோப்பிய ஆணையத் தலைவா் புகழாரம்

இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் தெரிவித்துள்ளாா். 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை வெ... மேலும் பார்க்க

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திர... மேலும் பார்க்க