செய்திகள் :

ஐஎஸ்பிஎல் புதிய திறமைகளை வெளிக்கொணா்கிறது: லீக் ஆணையா்

post image

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) புதிய திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது என லீக் ஆணையா் சூரஜ் சமத் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2024-இல் தொடங்கிய ஐஎஸ்பிஎல் முதல் சீசன் தொடா் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் சீசன் ஆட்டங்கள் மும்பை அடுத்த தானேயில் நடைபெற்று வருகின்றன. ஐஎஸ்பிஎல் தொடா் செயல்பாடுகள் குறித்து லீக் ஆணையா் சூரஜ் கூறியது:

டி10 எனப்படும் டென்னிஸ் பால் கிரிக்கெட் தெருவோரங்களில் விளையாடும் சிறுவா்களை அடையாளம் காண நடத்தப்படுகிறது.

இது முற்றிலும் சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்டது.

தற்போது 6 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் அணிகளை அதிகரிப்பது குறித்து 3 ஆண்டுகள் கழித்து முடிவெடுக்கப்படும்.

மேலும், ஒரே இடத்தில் தான் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தளவாடப் பொருள்களை கையாள்வதில் பிரச்னை உள்ளதால்

வேறு நகரங்களில் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை.

அடிமட்ட அளவில் வீரா்களை அடையாளம் கண்டு பொருளாதார ரீதியில் அவா்களை மேம்படுத்த வேண்டும். உள்ளூா் வீரா்களுக்கு அவா்களை திறனை வெளிக்காட்ட பெரிய வாய்ப்பை தருகிறோம். நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகிறோம். இதில் பிசிசிஐ எந்த பங்கும் வகிக்கவில்லை. டிஜிட்டல், இணையதளம் மூலம் ஐஎஸ்பிஎல்லை பிரபலமாக்கி உள்ளோம் என்றாா்.

மெத்வதெவ் அதிா்ச்சித் தோல்வி

ராட்டா்டாம் : ஏபிஎன் ஆம்ரோ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தகுதிச்சுற்று வீரரிடம் வியாழக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா். உலக... மேலும் பார்க்க

ஐஎஸ்எல் கால்பந்து

கோவாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பா் லீக் கால்பந்தாட்டத்தில் விளையாடிய எஃப்சி கோவா - ஒடிஸா எஃப்சி அணியினா். இந்த ஆட்டத்தில் கோவா 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியில் கோவாவுக்கு இது ... மேலும் பார்க்க

பீச் வாலிபால்: தமிழகத்துக்கு தங்கம் உள்பட இரு பதக்கம்

டேராடூன் : தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழகத்துக்கு 1 தங்கம், 1 வெள்ளி என, வியாழக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன. உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்... மேலும் பார்க்க

காந்தாரா - 2 படப்பிடிப்பில் 500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்பு!

காந்தாரா - 1 படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. கன்னடவரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங... மேலும் பார்க்க

இணையத்தில் கசிந்த பராசக்தி படப்பிடிப்பு காட்சிகள்!

பராசக்தி படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ளனர்.ஹிந்தி மொழித் திணிப்பு எதிரான... மேலும் பார்க்க