செய்திகள் :

ஐபிஎல்: சென்னைக்கு எதிராக ஹர்திக் விளையாடமாட்டார்! ஏன்?

post image

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இதையும் படிக்க : சாப்பிட பணமில்லாமல் கஷ்டப்பட்டவர் இன்று மும்பை அணியின் பெருமைமிக்க கேப்டன்: நீதா அம்பானி

ஹர்திக் விளையாடமாட்டார்

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் விளையாடும் முதல் லீக் போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்.

கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியனஸ் அணி இரண்டு முறை மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, மும்பை அணி விளையாடிய கடைசி லீக் ஆட்டத்திலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். இதனால், ஐபிஎல் விதிகளின்படி, மூன்றாவது முறை ஒரு அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதமும், அடுத்த போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.

இதனால், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அணிக்கு மீண்டும் திரும்புவார்.

மேலும், சென்னைக்கு எதிரான போட்டியில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோரில் யார் கேப்டனாக செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க