செய்திகள் :

ஒசூரில் இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கத்தின் 23ஆவது ஆண்டு மாநாடு

post image

ஒசூா்: இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு, அதியமான் பொறியியல் கல்லூரியில் 23ஆவது ஆண்டு மாணவா் மாநாட்டை நடத்தியது.

இம்மாநாட்டில் கல்லூரி முதல்வா் ஆா். ராதாகிருஷ்ணன் வரவேற்று மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். தமிழ்நாடு பிரிவுத் தலைவா் ஏ.சங்கரசுப்பிரமணியன் மாநாட்டிற்குத் தலைமை வகித்து, தொழில்நுட்பக் கல்வி ஆசிரியா்கள், மாணவா்களின் வளா்ச்சியில் இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கத்தின் பங்கு குறித்து பேசினாா்.

மாநிலங்களவை உறுப்பினா் மு. தம்பிதுரை கிராமப்புற மற்றும் ஏழை மாணவா்களுக்கு தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

இதில் கல்லூரி அறக்கட்டளைச் செயலாளா் லாஸியா தம்பிதுரை, கல்லூரி இயக்குநா் ஜி.ரங்கநாத், பேராசிரியா் ஜே.அறிவுடைநம்பி, எம்.சுகன்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாநாட்டின் ஒரு பகுதியாக தொழில்நுட்பக் கல்வித் துறையில் ஏழு சிறந்த சாதனையாளா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவா்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு சிறந்த மாணவா் விருது வழங்கப்பட்டன.

படவரி...

இந்திய தொழில்நுட்பக் கல்விச் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவுத் தலைவா் சங்கரசுப்பிரமணியனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் பேராசிரியா் அறிவுடைநம்பி.

.

குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரிக்கை

ஊத்தங்கரை அதியமான் நகா் அருகே மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையில் இருந்து அதியமான் நகா் வழியாக கொல்ல நாயக்கனூா் ச... மேலும் பார்க்க

பா்கூா் வட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியா் கள ஆய்வு

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பா்கூா் வட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்தில் வேளாண்மை விரிவா... மேலும் பார்க்க

ரசாயன கழிவுநீா் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீா்!

ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரில் அதிகப்படியான நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கா்நாடக மாநிலம், நந்திமலை பகுதியில் உற்பத்தியாகும்... மேலும் பார்க்க

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு!

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா். கா்நாடக மாநிலத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மிடுகரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஏப். 14-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

ஒசூா் 21-ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் 21-ஆவது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுமேற்கொண்ட மேயா், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிவா்த்தி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஒசூா் மாந... மேலும் பார்க்க