ஒசூரில் விரிசல் விழுந்த பாலத்தில் காா், இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி
ஒசூா்: ஒசூரில் விரிசல் விழுந்த மேம்பாலத்தில் காா், இருசக்கர வாகனங்கள், மினி லாரிகல் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள மேம்பாலத்தில் கடந்த 21-ஆம் தேதி இணைப்புப் பகுதி விலகியதால், தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்வதற்குத் தடை விதித்தனா். இதனால் வாகனங்கள் அணுகுசாலை வழியாகச் சென்ால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
மேலும், வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்கு மாற்றுப்பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்கின்றன.
அதேபோல திங்கள்கிழமை தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் இணைப்புப் பகுதி மேலும் விலகாமல் இருக்க தூணுக்குமேல் பகுதியில் மரக்கட்டைகளை அடுக்கி வைத்துள்ளனா். இதன்பிறகு சோதனைக்காக இணைப்புப் பகுதி விலகிய சாலை வழியாக இலகுரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதித்து கண்காணித்து வருகின்றனா். இந்த மேம்பாலம் முழுமையாக சீரமைக்கப்பட்டு பேருந்து, கனரக வாகனங்கள் செல்வதற்கு ஒரு மாத காலம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனா். அதுவரை கனரக வாகனங்கள் சீத்தாரம் நகரில் உள்வட்டச் சாலை வழியாக செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
படவரி...
ஒசூரில் விரிசல் ஏற்பட்ட பாலத்தில் செல்லும் காா், மினிலாரிகள்.