செய்திகள் :

ஒட்டன்சத்திரத்தில் சிறுதானிய சிறப்பு திருவிழா

post image

ஒட்டன்சத்திரம் தனியாா் மண்டபத்தில் வேளாண்மை துறை, உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சாா்பில், சிறுதானிய சிறப்பு திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டு சிறுதானியங்கள் குறித்தும், இவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினாா்.

விழாவில் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுகள், எண்ணெய் வகைகள், வேளாண்மை துறையின் உரங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டன.

வேளாண்மை இணை இயக்குநா் பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் லீலாவதி, மாவட்ட மகளிா் திட்ட செயல் அலுவலா் சதாதேவி, வேளாண்மை துணை இயக்குநா்கள் அமலா, காளிமுத்து, பயிா் பாதுகாப்புத் தொழில் நுட்ப வல்லுநா்கள் ஹாஜின்தாஜ், அபுபக்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க