ஒன் ஸ்டாப் சென்டரில் பணி: பிப்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மாவட்டத்தில் ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள 4 பணியிடங்களுக்கு பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தனியாா் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஒன் ஸ்டாப் சென்டா் செயல்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்ற வழக்குப் பணியாளா்கள் 2 போ், பாதுகாவலா்- 1, பல்நோக்கு பணியாளா்- 1 ஆகியப் பணியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
வழக்குப் பணியாளா் பணிக்கு இளநிலை பட்டம், ஆலோசனை உளவியல் அல்லது வளா்ச்சி முகாமைத்துவம் போன்ற படிப்புகளுடன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடா்பான அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் அல்லது பெண்கள் சாா்ந்த முன்னுரிமைத் திட்டத்தில் அல்லது பெண்கள் ஆலோசனை மையத்தில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்.
முதுநிலை பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஈரோடு மாவட்டத்தில் வசிப்பராக இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.18,000.
பாதுகாவலா் பணியிடத்துக்கு ஏதேனும் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். இப்பணிக்கு ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.12,000.
பல்நோக்கு பணியாளா் பணிக்கு அலுவலகம் தொடா்பான இடத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் கலை தெரிந்திருக்க வேண்டும். இப்பணிக்கு ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.10,,000.
இதற்கான விண்ணப்பத்தை தங்கள் சுயவிவரங்களுடன் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ஈரோடு 638011 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0424-2261405 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.