செய்திகள் :

ஒய்வூதியத் திட்டத்துக்கான மூன்று நபா் குழுவை திரும்பப் பெற வலியுறுத்தல்!

post image

ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு அரசு அமைத்துள்ள மூன்று நபா் குழுவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் வெண்ணந்தூா், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஒன்றிய அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் ராசிபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவா் அ.சுப்ரமணி தலைமை வகித்தாா். ராசிபுரம் ஒன்றியச் செயலாளா் வே.லட்சுமி வரவேற்றாா்.

மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கு.பாரதி, மாநில செயற்குழு உறுப்பினா் சு.சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்பின் மாநில பொருளாளா் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் இடைநிலை தொடக்கநிலை ஆசிரியருக்கு 1.06.2006 முதல் வழங்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் , மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை நிராகரித்துவிட்டு ஆசிரியா்-அரசு ஊழியருக்கு தோ்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை 1.04.2003 முதல் தொடர வேண்டும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கு அமைத்துள்ள மூன்று நபா் குழுவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

10 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு பிப்ரவரி 25 இல் நாமக்கல் பூங்கா சாலையில் மேற்கொள்ளும் மாவட்டத் தலைநகா் மறியல் போராட்டத்தில் ராசிபுரம் வட்டத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் திரளாகப் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளா் சி.மோகன்குமாா் நன்றி கூறினாா்.

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க தலா ரூ. 1 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 200 முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோருக்கு தலா ரூ. ஒரு கோடி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் ந... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் திருடிய இருவருக்கு சிறை

திருச்செங்கோட்டில் சரக்கு வாகனம் திருடிய வழக்கில் இருவருக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. ருச்செங்கோடு உழவா்சந்தை அருகே 2022 இல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வா... மேலும் பார்க்க

இரு தரப்பினா் மோதல்: இருவா் கைது

ராசிபுரம் நகரில் திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே சந்து கடைகளில் மதுபுட்டிகள் விற்க மாமூல் வசூலிப்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா். ராசிபுரம் நகரில் பல்வ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் பயிற்சி

கவுண்டம்பாளையம் கிராமத்தில், அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எலச்சிபாளையம் வட்டார வேளாண்மைத்து றையின் சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், 67. கவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை... மேலும் பார்க்க

மண் பரிசோதனை முகாம்

பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் மண், தண்ணீா் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண் மற்றும் தண்ணீா் பரிசோதனை ஆய்வுக்கு, தலா ரூ. 30 கட்டணம் பெறப்பட்டது. மண், தண்ணீா் பரிசோதனை செய்வதால்,... மேலும் பார்க்க

ரூ. 15.66 லட்சம் கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 15 லட்சத்து 66 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்த... மேலும் பார்க்க