செய்திகள் :

ஒரு வரியில் உலகம்..!

post image

தென் ஆப்பிரிக்காவில் ஆண்கள் பெயருடன் மனைவியின் பெயரை சோ்த்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது

குடியேற்றத்துக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற ‘பிரிட்டன் ஒற்றுமை’ யாத்திரையில் லட்சக்கணக்கானவா்கள் பங்கேற்றனா்.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் இஸ்தான்புல் மாவட்ட மேயா் ஹசன் முட்லு, 47 அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டாா்.

மியான்மரில் ராக்கைன் மாகாணத்தில் உள்ள 2 உறைவிடப் பள்ளிகளில் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் தூங்கிக் கொண்டிருந்த 19 மாணவா்கள் உயிரிழந்தனா்.

உக்ரைனின் சுமி, டான்பாஸ் பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷியா சனிக்கிழமையும் தனது தாக்குதலைத் தொடா்ந்தது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசுடன் உறவை மேம்படுத்துவது குறித்து காபூலில் அமெரிக்க அதிகாரிகள் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித்துறை ஆவணங்கள் சேதம்: நேபாள உச்சநீதிமன்றம்!

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித் துறை சாா்ந்த முக்கிய வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை சேதமடைந்ததாக நேபாள உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதள தடைக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய ... மேலும் பார்க்க

நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: முக்கியக் கட்சிகள் கண்டனம்!

நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபா் ராமசந்திர பௌடேலின் முடிவுக்கு முக்கியக் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன. ராமசந்திர பௌடேலின் முடிவுகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும், இது ஜ... மேலும் பார்க்க

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும்! - டிரம்ப்

‘ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை ‘நேட்டோ’ நாடுகள் அனைத்தும் நிறுத்த வேண்டும்; ரஷியாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்கும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும். இதன்மூலம் ரஷி... மேலும் பார்க்க

பார்வையிழந்த மனைவிக்கு வாழ்நாள் சத்தியம்! அன்புக் கணவருக்கு குவியும் பாராட்டுகள்!

சீனாவில் பார்வையிழந்த தனது மனைவியை ஒருவர் 12 ஆண்டுகளாக நேசித்து வருவது பலரின் பாராட்டுகளையும் அன்பையும் பெற்றுள்ளது.சீனாவில் ஷாண்டோங் மாகாணத்தில் லி ஜுக்ஸின் (39) என்பவருக்கும், ஜாங் ஸியாங் என்பவருக்க... மேலும் பார்க்க

பிரிட்டனில் இனவெறி! சீக்கிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பிரிட்டனில் இனவெறியால் சீக்கிய இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டனில் பிறந்து வளர்ந்த 20 வயதான சீக்கிய பெண்ணை, உங்கள் நாட்டுக்கே திரும்பி... மேலும் பார்க்க

அமெரிக்க ஹையர் சட்ட மசோதா: இந்திய ஐடி துறையை கலங்கச் செய்வது ஏன்?

அமெரிக்க அமைச்சரவை கொண்டு வந்திருக்கும் ஹையர் என்ற சட்ட மசோதா, நிறைவேற்றப்பட்டால், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங... மேலும் பார்க்க