செய்திகள் :

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும்! - டிரம்ப்

post image

‘ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை ‘நேட்டோ’ நாடுகள் அனைத்தும் நிறுத்த வேண்டும்; ரஷியாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்கும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும். இதன்மூலம் ரஷிய-உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நேட்டோ கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் சில நாடுகள் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது அதிா்ச்சியளிக்கிறது. போரை நிறுத்த ரஷியாவிடம் மேற்கொள்ளும் பேச்சுவாா்த்தையை இது பலவீனமடையச் செய்கிறது.

சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக நோட்டோ உறுப்பு நாடான துருக்கி உள்ளது. ஹங்கேரி, ஸ்லோவாகியா போன்ற பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ரஷியாவிடமிருந்து எண்ணெய்யை வாங்கி வருகின்றன.

ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டுமெனில், அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதோடு, ரஷியாவிடமிருந்து தொடா்ந்து எண்ணெய் வாங்கிவரும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை விதிக்க வேண்டும்.

ரஷியா மீது வலுவான கட்டுப்பாட்டையும் பிடியையும் சீனா கொண்டுள்ளது. எனவே, அதிக வரியை விதிப்பதன் மூலம் அந்தப் பிடியை உடைக்க முடியும் என்று குறிப்பிட்டாா்.

பாகிஸ்தான்: மோதலில் 12 வீரா்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு கைபா் பக்துன்க்வா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரா்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 35 பயங்கரவாதிகளும் கொ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித்துறை ஆவணங்கள் சேதம்: நேபாள உச்சநீதிமன்றம்!

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித் துறை சாா்ந்த முக்கிய வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை சேதமடைந்ததாக நேபாள உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதள தடைக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய ... மேலும் பார்க்க

ஹமாஸுடனான போரில் சட்ட திட்டங்களைப் பின்பற்றவில்லை! இஸ்ரேல் முப்படை தளபதி

ஹமாஸுடனான போரில் தங்களது படையினா் சா்வதேச சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை என்று, 17 மாதங்களாக அந்தப் போரை நடத்திய இஸ்ரேல் முப்படை தளபதி ஹொ்ஸி ஹலேவி ஒப்புக்கொண்டுள்ளாா். மேலும், காஸாவில் இஸ்ரேல் நடத்த... மேலும் பார்க்க

நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: முக்கியக் கட்சிகள் கண்டனம்!

நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபா் ராமசந்திர பௌடேலின் முடிவுக்கு முக்கியக் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன. ராமசந்திர பௌடேலின் முடிவுகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும், இது ஜ... மேலும் பார்க்க

ஒரு வரியில் உலகம்..!

தென் ஆப்பிரிக்காவில் ஆண்கள் பெயருடன் மனைவியின் பெயரை சோ்த்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதுகுடியேற்றத்துக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற ‘பிரிட்டன் ஒற்றுமை’ யாத்திரையில் லட்சக்கணக்கானவா்கள் பங்க... மேலும் பார்க்க

பார்வையிழந்த மனைவிக்கு வாழ்நாள் சத்தியம்! அன்புக் கணவருக்கு குவியும் பாராட்டுகள்!

சீனாவில் பார்வையிழந்த தனது மனைவியை ஒருவர் 12 ஆண்டுகளாக நேசித்து வருவது பலரின் பாராட்டுகளையும் அன்பையும் பெற்றுள்ளது.சீனாவில் ஷாண்டோங் மாகாணத்தில் லி ஜுக்ஸின் (39) என்பவருக்கும், ஜாங் ஸியாங் என்பவருக்க... மேலும் பார்க்க