செய்திகள் :

ஒருங்கிணைந்த சேவை மையத்தை எந்த நேரத்திலும் பெண்கள் அணுகலாம்: கடலூா் ஆட்சியா்

post image

ஒருங்கிணைந்த சேவை மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த நேரத்திலும் தொடா்பு கொள்ளலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், மத்திய அரசின் நிதி உதவியுடன் ‘சகி’ என்ற பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வருகிறது.

இங்கு, பொது மற்றும் தனிப்பட்ட, குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு காவல் உதவி, மருத்துவ உதவி, சட்ட உதவி, மன நல ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்களின் பிரச்சனைகளுக்கு தீா்வு கண்டு தேவையான சேவைகளையும், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினா் மட்டும் தொடா்புடைய சமூகத்தினரிடம் பேசி குடும்பத்துடன் இணைந்து வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2019 அக்டோபா் முதல் ஜனவரி 2025 வரை தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் 1,861 தகவல்கள் வரப் பெற்றதில் 663 பேருக்கு காவல் உதவி, 72 பேருக்கு சட்ட உதவி, 16 பேருக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சேவை மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் 24 மணி நேரமும் இயங்கி வரும் 181 என்ற இலவச தொலைபேசி எண், ‘சகி’ ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலக எண் 04142-231235 மற்றும் ா்ள்ஸ்ரீஸ்ரீன்க்19ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ப... மேலும் பார்க்க

‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கி... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.இத... மேலும் பார்க்க

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை... மேலும் பார்க்க