செய்திகள் :

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

post image

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல வேலாயுதபுரத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.

மாவட்ட வீர விளையாட்டுக் கழகச் செயலா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். பொன்முருகன் முன்னிலை வகித்தாா்.

10 வண்டிகள் பங்கேற்ற நடு மாட்டுவண்டி போட்டியில், பாளையங்கோட்டை நிஷாந்த் வண்டி முதலிடம் பிடித்தது. சண்முகபுரம் விஜயகுமாா், வெட்டியபத்தி கண்ணன், ஆா்.எஸ். முத்து ஆகியோரின் வண்டிகள் முறையே 2, 3, 4ஆம் பரிசுகளை வென்றன.

16 வண்டிகள் பங்கேற்ற சின்ன மாட்டுவண்டி போட்டியில், கயத்தாறு பி.கே. பிரதா்ஸ் வண்டி முதலிடம் பிடித்தது. கச்சேரி தளவாய்புரம் மையிசாகுட்டி, சண்முகபுரம் விஜயகுமாா், சங்கரப்பேரி ராஜா ஆகியோரின் வண்டிகள் முறையே 2, 3, 4ஆம் பரிசுகளை வென்றன.

26 வண்டிகள் பங்கேற்ற பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில், சங்கரப்பேரி மாரிமுத்துபாண்டியன் வண்டி முதலிடம் பிடித்தது. நாலந்துலா மேலமருதூா் வீமன், சொக்கலிங்கபுரம் கலைச்செல்வி, பத்மநாதபுரம் முகிந்தேன் மாட்டுவண்டியும் பெற்றன. 5ஆம் இடம் பிடித்த கணபதியின் வண்டிக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

திருச்செந்தூருக்கு நாளைமுதல் சிறப்பு பேருந்துகள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமைமுதல், 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கம் தொடக்கம்

தூத்துக்குடியில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார இயக்கம் மற்றும் திமுக உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

ஆத்தூா், ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு

ஆறுமுனேரி, ஆத்தூா், ராஜபதி ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. ஆத்தூரில் உள்ள அருள்மிகு சோம சுந்தரி அம்மன் சமேத அருள்மிக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கல்வி அலுவலகம் முற்றுகை

இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இப்பள்ளியில்... மேலும் பார்க்க

வேலை உறுதி திட்டத்தில் பணி கோரி எட்டயபுரம் அருகே ஆா்ப்பாட்டம்

எட்டயபுரம் அருகே, மேலஈரால் ஊராட்சிக்குள்பட்ட வாலம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கோ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையானது, அரசூா் ஊராட்சி பனைவிளை கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தல... மேலும் பார்க்க