ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில், தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் எம். ஜேசுமணி தலைமை வகித்தாா். இணை அமைப்பாளா் சி. பொன்ராஜ் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் இல. ராமமூா்த்தி ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பேசினா்.
ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850, அகவிலைப்படி வழங்க வேண்டும். பணிஓய்வுக்கு பின்னரும் காப்பீட்டுத் திட்டத்தை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இதில், பங்கேற்றோா் கருப்பு உடை அணிந்திருந்தனா்.