செய்திகள் :

ககிசோ ரபாடாவுக்கு அனுமதி

post image

போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் குஜராத் டைட்டன்ஸின் தென்னாப்பிரிக்க பௌலர் சுகிசோ ரபாடாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அவர் விளையாடத் தயாராக இருப்பதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏடி 20 லீக் கிரிக்கெட்டில் எம்ஐ கேப்டவுன் அணிக்காக விளையாடியபோது பொழுதுபோக்கு அடிப்படையில் ரபாடா போதை மருந்து பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.

இந்நிலையில் அவர் ஊக்கமருந்து பரிசோதனையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தோல்வியடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரபாடா தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்கா திரும்பியதாக குஜராத் அணி நிர்வாகம் அறிவித்தது.

ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்த ரபாடாவுக்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடைக் காலம் தற்போது முடிவடைந்த நிலையில், இந்த ஒரு மாத காலத்தின்போது தென்னாப்பிரிக்காவிலுள்ள விளையாட்டுக்கான ஊக்கமருந்து தடுப்பு அமைப்பில் போதை மருந்து பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கலந்தாலோசனைகளில் அவர் பங்கேற்றார்.

தற்போது அதையும் அவர் நிறைவு செய்த நிலையில், ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அவர் தயாராக இருப்பதாக குஜராத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக போதைப்பொருள் பயன்படுத்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம். எனினும், போட்டிகளில் பங்கேற்காதபோது அதை பயன்படுத்தியதாகவோ, போட்டிகளில் செயல்திறனை அதிகரிக்க அதை பயன்படுத்தவில்லை என்றோ நிரூபித்தால் தடைக்காலம் 3 மாதங்களாகக் குறைக்கப்படலாம். போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு சுலந்தாலோசனையில் பங்கேற்றால் அந்தத் தடைக்காலம் மேலும் குறையும் என்ப து குறிப்பிடத்தக்கது.

அடுத்தப்படம் இதுதான்: கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் அடுத்தப்படம் குறித்து பேசியுள்ளார்.நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கல... மேலும் பார்க்க

சுந்தரி தொடர் நாயகிக்கு குழந்தை பிறந்தது!

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில... மேலும் பார்க்க

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் தீ மிதி திருவிழா!

விராலிமலை: விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின... மேலும் பார்க்க

ஹைதராபாதை வெளியேற்றியது மழை!

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் திங்கள்கிழமை மோதிய 55-ஆவது ஆட்டம், மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட் டது.பிளே-ஆஃப் ப... மேலும் பார்க்க

ஆஸ்கா் பியாஸ்ட்ரிக்கு ஹாட்ரிக் வெற்றி

ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றாா்.மொத்தம் 57 லாப்கள் கொண்ட இந்... மேலும் பார்க்க

செல்ஸியிடம் வீழ்ந்தது லிவா்பூல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், இந்த சீசன் சாம்பியனாகியிருக்கும் லிவா்பூல் அணி 1-3 கோல் கணக்கில் செல்ஸியிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் செல்ஸி தரப்பில் என்ஸோ ஃபொ்னாண்... மேலும் பார்க்க