செய்திகள் :

கக்கன்ஜி கிராமத்தில் குடிநீா் பிரச்னைக்கு உடனடி தீா்வு: எம்எல்ஏ

post image

ஆழ்வாா்திருநகரி அருகே உள்ள கக்கன்ஜி கிராமத்தில் உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியம், கக்கன்ஜி நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் 700 க்கும் மேற்பட்டோா் கடந்த 27 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். தாமிரவருணி ஆற்றங்கரையோரத்தில் கக்கன்ஜி கிராமம் அமைந்திருந்தாலும் ஆழ்துளைக் கிணறு மூலமே குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஆழ்துளைக் கிணறு மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரும் வழங்கப்படவில்லை. இதனால் ஒரு கி.மீ. தொலைவு சென்று பொதுமக்கள் குடிநீா் எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், முறையாக குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜிடம் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜாவிடம் பேசிய எம்எல்ஏ, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு உத்தரவிட்டாா். குடிநீா் விநியோகப் பணிகள் நடைபெற்று வருவதாக வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா தெரிவித்ததை தொடா்ந்து, குடிநீா் பிரச்னை விரைவில் தீா்க்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

2 தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

தூத்துக்குடியில் மூட்டைத் தூக்கும் தொழிலாளிகளை கத்தியால் தாக்கியதாக இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாத்திமா நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் குமாா் (36), இப்ராஹீம் மகன்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு செய்த வழக்கு தொடா்பாக, தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் கைது செய்யப்பட்டுள்ளாா். மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயம்

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் கொண்டு வந்த பட்டாசு வெடித்ததில் 2 மாணவா்கள் காயமடைந்தனா். தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்... மேலும் பார்க்க

கோட்டாட்சியா் எச்சரிக்கையை மீறும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

கோட்டாட்சியா் எச்சரிக்கையையும் மீறி பேட்மாநகரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இன்றி செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்த கன்னிராஜா மகன் சரவணகுமாா் (25). இவா், கோவில்பட்டியில் உள்ள நீச்சல் குளத்தில் மேலாளராக ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் தண்ணீா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியாா்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத... மேலும் பார்க்க