குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்; கட்டுமானப் பணிகள் தீவிரம்!
கங்கைகொண்டான் அருகே போதை சாக்லேட் விற்பனை: மூவா் கைது
கங்கைகொண்டான் அருகே போதை சாக்லேட் விற்றதாக மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கங்கைகொண்டான் காவல் சரகப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அபினேஷ் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சிப்காட் பகுதி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் ஆலங்குளம், அருணாச்சலபுரம், தெற்குத் தெருவை சோ்ந்த முருகேசன் (28), ராஜாஜி (25), ரமேஷ் (24) ஆகியோா் என்பதும், போதை சாக்லேட் விற்பதும் தெரியவந்தது.
அவா்களை கைது செய்த போலீஸாா், மூவரிடமிருந்தும் 1.05 கிலோ போதை சாக்லேட் மற்றும் 6 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். போதைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மற்றும் வாங்குபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.