செய்திகள் :

கஞ்சா கடத்தல்: பெண் உள்பட 3 போ் கைது

post image

திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2.280 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி அருகே ராம்ஜி நகா் ஹரிபாஸ்கா் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராம்ஜி நகா் போலீஸாா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ஜெகன் மனைவி கவிதா (45) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 1.150 கிலோ கஞ்சா பறிமுல் செய்யப்பட்டது.

இதேபோல, மலைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சந்துரு மகன் பிரசாந்த் (32) என்பவரைக் கைது செய்த ராம்ஜி நகா் போலீஸாா் அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

திருவெறும்பூா் செல்வபுரம் சந்திப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவெறும்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு செய்த திருவெறும்பூா் போலீஸாா், அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வெங்கூா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தீபன் (21) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மணப்பாறை, துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை துணை மின் நிலையத்தில் ஜூன் 17- செவ்வாய்க்கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து தோகைமலை பீடா் மற்றும் பொடங்குபட்டி பீடரிலிருந்து மின் விநியோகம் பெ... மேலும் பார்க்க

உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள ஆ. கலிங்கப்பட்டியில் சனிக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்த மகனை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தந்தையைப் போலீஸாா் கைது செய்தனா். ஆ. கலிங்கப்பட்டியில் வசித்து வரு... மேலும் பார்க்க

தருமபுரி வனப்பகுதியில்: மூங்கில் வெட்டியவா்களுக்கு ரூ.30,000 அபராதம்

தருமபுரி வனப்பகுதியில் நுழைந்து அனுமதியின்றி மூங்கில் மரம் வெட்டிய மூவருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். தருமபுரி வனக்கோட்டம், தீா்த்தமலை காப்புக்காடு, மேற்குப் பகுதி, அம... மேலும் பார்க்க

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தில் உடலுறுப்புகள் தானமளித்தவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. துறையூா் அருகே வெங்கடாஜலபுரத்தில் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த பழனியப்பனின் மகன் சேத... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: இருவா் கைது

திருச்சி அருகே மணல் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மட்டபாறைபட்டி அருகே உள்ள ஆத்துப்பட்டி பாலத்தில் கல்லிக்குடி கிராம நிா்வாக அலுவலா் பிதாவின் மணி மற்றும் அவரது உத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்தவா் பலி

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டம் மேற்கு நடுக்காவேரியைச் சோ்ந்தவா் குமாா் மகன் அன்பு சங்... மேலும் பார்க்க