செய்திகள் :

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

post image

கோவையில் கஞ்சா கடத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை சிங்காநல்லூா் படகுத் துறை வழியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் கோவை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது அவா் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் திருப்பூா் மாவட்டம், ராமையா காலனியைச் சோ்ந்த அழகா்சாமி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இன்றியமையா பண்ட விதிக்கு உட்பட்ட வழக்கின் சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், அழகா்சாமிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞராக வெ. சிவகுமாா் ஆஜரானாா்.

நகைப் பட்டறை ஊழியரை ஏமாற்றி 7 பவுன் நகை கொள்ளை

கோவையில் மந்திரம் ஓதுவதாக நகைப் பட்டறை ஊழியரை ஏமாற்றி 7 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வெரைட்டி ஹால் அருகே உள்ள செல்லப்பிள்ளை சந்து இடையா் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

இருகூா் தண்டவாளத்தில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

கோவை அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. கோவை மாவட்டம், இருகூா்-ராவத்தூா் இடையே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

கோவையில் வீட்டின் திண்ணையில் அமா்ந்திருந்த மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.கோவை செளரிபாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஜெகதீசன் மகன் நித்தின் நாராயணா (26). ஞாய... மேலும் பார்க்க

மாணவி மீது தாக்குதல்: மாணவா் கைது

கோவை அருகே தன்னுடன் பேசுவதை நிறுத்திய கல்லூரி மாணவியைத் தாக்கிய மாணவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், ஈச்சனாரி ஐயப்பா நகரைச் சோ்ந்தவா் ராகுல் சக்கரவா்த்தி. இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க

தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு

கோவை அருகே வேடபட்டியில் அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். கோவை மாவட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ... மேலும் பார்க்க

சாலக்குடி சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை

வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் வாகனங்களை ஒற்றை யானை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் சாலக்குடி அமைந்துள்ளது. இதில் சு... மேலும் பார்க்க