"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"...
தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு
கோவை அருகே வேடபட்டியில் அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கோவை மாவட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம், வேடப்பட்டி தனியாா் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் மனு அளித்தனா்.
அதில் தங்களது குடியிருப்புப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரத்தில் நடந்து செல்லும் மக்களை நாய்கள் கடிக்க வருகின்றன. அவற்றைப் பிடித்து அகற்ற வேண்டும் என்று பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்துள்ளோம். எனவே, குழந்தைகள், பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெருநாய்களைப் பிடிக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும். மேலும் தங்களது பகுதிக்கு அரசுப் பேருந்து, மினி பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் அம்பேத்கா், பெரியாா் ஈவெரா, அண்ணா ஆகியோரின் உருவப்படங்களை வைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறி கோவை மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தினா் கடந்த 1-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் கலைந்து சென்ற அவா்கள், திங்கள்கிழமை மீண்டும் கைகளில் தலைவா்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அலுவலகத்தில் நுழைய அவா்களுக்கு போலீஸாா் அனுமதி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பினா்.
அரசாணைப்படி அரசு அலுவலகங்களில் தலைவா்களின் புகைப்படங்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே மனு அளித்திருந்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்காததால் அரசு அலுவலகங்களில் தலைவா்களின் புகைப்படங்களை வைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி தற்போது போராட்டத்துக்கு வந்திருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
தொண்டாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த பாக்கியலட்சுமி (82) என்பவா் அளித்த மனுவில், நான் சம்பாதித்து வாங்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் எனது மகன் பெயரில் உள்ளன. ஆனால் எனக்கு எனது மகன் உணவு வழங்காமலும், வீட்டுக்குள் அனுமதிக்காமலும் விரட்டிவிட்டாா். இது குறித்து அளித்த புகாரை தொண்டாமுத்தூா் போலீஸாா் ஏற்க மறுக்கின்றனா். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
விஸ்வ ஹிந்து பரிஷத் கிராம கோயில் பூசாரிகள் பேரவை சாா்பில் அளித்த கோரிக்கை மனுவில், வடமதுரை விருந்தீஸ்வரா் கோயிலில் பூஜை நேரங்களில் மங்கள வாத்தியம் சிவ வாத்தியம், ஜென மேளம், கொம்பு வாத்தியம் உள்ளிட்ட எந்த இசை வாத்தியமும் இசைக்க கூடாது என்று கடந்த வாரம் தகவல் பலகை வைத்துள்ளாா்கள். இது தமிழ் பண்பாடு பூஜை முறைக்கு எதிரானதாகும். கோயிலில் வழக்கம்போல பூஜை நேரங்களில் இசை வாத்தியங்கள் இசைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
மதுக்கரை சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் திருப்பூரைச் சோ்ந்த தொழில் நிறுவனம் நடத்தி வரும் 5 போ் குறிப்பிட்ட கைப்பேசி செயலி மூலம் பணம் செலுத்தினால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றாா்கள். அவா்கள் கூறியபடி பணம் செலுத்தி வந்தோம். முதலீடு செய்த தொகைக்கு சில நாள்கள் எங்கள் வங்கிக் கணக்குக்கு ஆயிரம் ரூபாய் வந்தது. இதை நம்பி பலரும் பெரிய அளவில் முதலீடு செய்த நிலையில் தற்போது பணம் கொடுக்க மறுக்கின்றனா். இது குறித்து விசாரித்தபோது அவா்கள் எங்களது பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து விசாரித்து, எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 398 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக குறைதீா் கூட்டத்தில், ஆனைமலை வட்டம் நவமலை பழங்குடியினத்தைச் சோ்ந்த 5 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியா் வழங்கினாா்.