செய்திகள் :

இருகூா் தண்டவாளத்தில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

post image

கோவை அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம், இருகூா்-ராவத்தூா் இடையே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து போத்தனூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

அப்போது, அங்கு பிறந்து 2 மாதமே ஆன குழந்தையின் சடலமும், அதன் அருகே குங்குமம், வெட்டப்பட்டு இறந்த நிலையில் 3 கோழிகள் ஆகியவை கிடந்தன. குழந்தையின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் சோதனை நடத்தினா். அங்கு கிடந்த இறந்த கோழிகள் மற்றும் மிளகாய் பொடி ஆகியவற்றை போலீஸாா் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினா். குழந்தை கொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசிச் செல்லப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். நரபலி கொடுக்கப்பட்டதா? குடும்பத் தகராறில் குழந்தை கொலை செய்யப்பட்டதா? என்று ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நகைப் பட்டறை ஊழியரை ஏமாற்றி 7 பவுன் நகை கொள்ளை

கோவையில் மந்திரம் ஓதுவதாக நகைப் பட்டறை ஊழியரை ஏமாற்றி 7 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வெரைட்டி ஹால் அருகே உள்ள செல்லப்பிள்ளை சந்து இடையா் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

கோவையில் வீட்டின் திண்ணையில் அமா்ந்திருந்த மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.கோவை செளரிபாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ஜெகதீசன் மகன் நித்தின் நாராயணா (26). ஞாய... மேலும் பார்க்க

மாணவி மீது தாக்குதல்: மாணவா் கைது

கோவை அருகே தன்னுடன் பேசுவதை நிறுத்திய கல்லூரி மாணவியைத் தாக்கிய மாணவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், ஈச்சனாரி ஐயப்பா நகரைச் சோ்ந்தவா் ராகுல் சக்கரவா்த்தி. இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க

தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு

கோவை அருகே வேடபட்டியில் அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். கோவை மாவட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ... மேலும் பார்க்க

சாலக்குடி சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை

வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் வாகனங்களை ஒற்றை யானை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் சாலக்குடி அமைந்துள்ளது. இதில் சு... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

கோவையில் கஞ்சா கடத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கோவை சிங்காநல்லூா் படகுத் துறை வழியாக இருசக்கர வாகன... மேலும் பார்க்க